நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sunday

மறக்கப்படும் ஆழிப்பேரலை அவலங்கள்

இன்று 26.12.2011 ஆழிப்பேரலை அழிவின் ஏழாம் ஆண்டு நிறைவு நாள்.
தமிழீழத்தில் என்றுமே நிகழ்ந்திராத சில மணி நேரத்தில் வரலாறுகாணாத உயிர், உடமை பேரழிவுளை ஏற்படுத்தி மிகப்பெரும்   அழிவு
ளைத் தந்த சுனாமி பேரலை ஏற்பட்டு இன்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

Thursday

என்னை செதுக்கியவள்


சிலகாலத்துக்குமுன் பெர்லின் நகரத்திலை ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன்.  நீண்ட நாட்களின்பின் எனது நண்பர் ஒருவரை நேரில் சந்திக்கமுடிந்தது. அவரும் கலை, இலக்கியம், மேடைப் பேச்சு என்று பலதிலையும் கால் பதிச்சவர். சமத்துவம் பொதுவுடமை என்றெல்லாம் பந்தாவாக் கதைத்துக் கொண்டு திரியிறவர். பலதும் பத்தும் கதைத்துக்கொண்டு இருக்கும்போது அவர் சொன்னார். ஒருகப்பலுக்கு ஒரு கப்டன் (தலைவன்) அதுபோல வீட்டுக்கும் ஒற்றையாட்சிதான் சரி, அப்படியென்றால்தான் பிரச்சனைகள் இல்லாமல் முடிவுகள் எடுக்கலாம் என்று.
"ஓ! உங்கட மனுசி வலு கெட்டிக்காரிதானே அப்ப அவவே உங்கட கப்பலுக்குக் கப்டன்." என்று நான் வழமைபோலவே யோசிக்காமல் டக் என்று கேட்டன்......
"சீ! நல்ல கதையாக்கிடக்கு" .... அது வந்து  எப்பவும் ஆம்பிளையள்தான் கப்டனாக இருக்கவேணும் என்றார் அவசர அவசரமாக. 

Friday

சினிக்கவிஞரின் இலக்கியத்திருட்டுக்கள்.


சினிமா என்பது ஒருகலா வாணிகம் என்றே சொல்ல வேண்டும்.சிறுவனை நம்பி வண்ணவண்ண மிட்டாய் வியாபாரம் செய்யும் வியாபாரிபோல், பட்டிதொட்டியெல்லாம் வாழும் பாமர ரசிகனின் ரசனையே தமிழ்ச்சினிமாவின் முக்கிய மூலதனமாகும்.
அந்த ரசிகனின் ரசனைக்கேற்ப சினிமாப் பாடல்களை சிங்காரித்துக் கொடுக்கவே பாடலாசிரியரும்,இசையமைப்பாளரும் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள். இலக்கியத் துளிகளுக்கு எளிமைவண்ணம் பூசி பாமரனின் இதயத்தில் இடம்பிடிப்பதில் கவியரசு கண்ணதாசனும் வைரமுத்துவும் கைதேர்ந்தவர்களல்லவா?
ஐயகோ! வார்த்தைகளில் இதயத்தை வருடும் கலையை இவர்கள் எங்குதான் கற்றனரோ? அழகு தமிழ் அருவியாய்க் காது வழிப்பாய்ந்து நம் இதயத்தை நனைக்கும் மாயம்தான் என்ன?
"வாளொற்றிப் புற்கென்ற கண்ணும்
அவர் சென்ற நாளொற்றி தேய்ந்தவிரல்"என்ற
வள்ளுவரின் வரிகள் புரிந்ததோ இல்லையோ
"மாலை சூடும் தேதி எண்ணிப் பத்து விரலும் தேயும்"எனும் (பாலைவனச் சோலை) கவிஞரின் தேனாய் ஒழுகும் வரிகள் நம் நெஞ்சை என்னமாய்க் கொள்ளை கொண்டது. 

Monday

ஈழவயல்.....ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்ப்ச்சிட்டாங்க...

 ஈழவயல்.....செல்ல இங்கே அமுக்கவும்.


நெற்றிலை முழுக்க ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க!  ஈழவயலிலை பதிவுகளின் அறுவடை ஆரம்பிச்சிடிச்சு என்பதுதான்  பரபரப்பான செய்தியா பேசப்பட்டிட்டு இருக்கே என்று நானும் ஆகா வந்திரிச்சு ஆசையில் ஓடிவந்தேன் என்று போய்ப் பார்த்தால் உண்மையிலேயே நல்லபடியாகத்தான் ஆரம்பிச்சிருக்காங்க. நீங்களும் அங்கு போய்த்தான் பாருங்களேன்.



இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்! இணையத்தில் ஈழத்து மண் வாசத்தை சுமந்து வரும் ஈழ வயலை வரவேற்று கரங் கொடுத்தால் நீங்கள் ஓர் வாசகர்! விரல் கொண்டு எம் படைப்புக்கள் மெருகேறிட மென்மையாக வருடினால் நீங்கள் ஓர் விமர்சகர்!

வாருங்கள் நட்புக்களே தமிழால் இணைவோம்.
தமிழனாய் வாழ்வோம். தமிழிற்காய் வாழ்வோம்.
தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்

ஈழவயல் குழுவினரில் ஓருவனாக

நேசமுடன் அம்பலத்தார்



Wednesday

அம்பலத்தானெல்லாம் ஒரு கலைஞனென்று.....


இந்தப் புலம்பெயர் நாடுகளிலை இடம்பெறும் கலை நிகழ்வுகளிற்குப் போனால் பெரும்பாலும் எனக்கு எரிச்சலை உண்டாக்குகிற ஒரு விடயத்தைப்பற்றி உங்களுக்க் சொல்லாவிட்டால் எனக்கு மண்டையே வெடிச்சிடும்போலகிடக்கு சொல்லுறன் கேளுங்கோ.

Thursday

ஆண்களின் உலகத்தில் பெண்கள்


மீண்டும் ஒருதடவை உங்களுடன் பேசாப்பொருட்களை பேச முனைகிறேன். இங்கும் முன்புபோல உங்கள் ஆணித்தரமன கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிபார்த்திருக்கிறேன்.

Monday

ஓரினச்சேர்க்கை எனும் ஓரினக்காதலும் நானும்


இன்று நான் சர்ச்சைக்கு உரிய ஒரு விடயத்தை கையில் எடுத்திருக்கிறேன். இதில் குறிப்பிட்ட சம்பவங்கள் உண்மையான போதிலும் பெயர்களையும் சம்பவ களங்களையும் மாற்றியே குறிப்பிட்டுள்ளேன். சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடுவதைவிட்டு சம்பவங்களிற்கான காரணங்களை ஆய்வு செய்யுங்கள். பரந்த அறிவும் பக்குவமான மனதுமுடைய உங்களிடமிருந்து யாருடைய மனங்களையும் நோகடிக்காத கௌரவமான வார்த்தை, கருத்துப் பிரயோகங்களை எதிர்பார்க்கிறேன்.

Wednesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8




முன்னைய பகுதிகளை படிக்க 

சொல்லாதே யாரும் கேட்டால்...........7 



சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8

"உங்கட சண்டைகளாலை கடைசியிலை என்ரை நாயைக் கொன்றுபோட்டியளே!" என்று ஜெனி கத்தவும்தான் விளங்கியது, உவள் பாவி இவ்வளவு நேரமாக நாய் செத்த கவலையிலைதான் அழுதிருக்கிறாள் என்று. கடவுளே இப்பவாவது புரிஞ்சுதே. இனி மனிசியை வழிக்குக் கொண்டுவாற வழியைப் பார்ப்பம் என்ற எண்ணத்திலை.
"இப்ப விளங்குதே செல்லம். கிளியோ குரங்கோ என்ரை மனசில நீர்தானப்பா அடுத்வள்யாருக்கும் இடமில்லை. சும்மா எதுக்குக் கத்தி ஊரைக் கூட்டுறீர்." வார்த்தையை நான் முடிக்க முதலே.

Thursday

காதல் யாருக்கும் யார்மேலும் வரலாம் முறை தவறிய காதல்?

காதல் யாரிற்கு யார்மேல் எங்கே எப்பொழுது உண்டாகும் என்று சொல்லமுடியாது. இன்றைய இளைஞர்களினதும் யுவதிகளினதும் காதலையும் இணைதல்களையும் பிரிவுகளையும் கடுமையாக விமர்சிக்கும் மூத்த சந்ததியினரின் காதலும் காமமும் எப்படி இருக்கிறதென்பது விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது.

Wednesday

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அனைத்து அன்பு றவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 
விசேடமாக தாயகத்தில் சோகங்கள் இழப்புக்கள் 
என துயரங்களே வாழ்வாக, அன்றாட வாழ்விற்கே 
போராடும் எம் தொப்புள்கொடி உறவுகளின் 
துயரங்கள் நீங்கி, 
இனிய வாழ்வு மலர வாழ்த்துகிறேன்.

நேசமுடன் அம்பலத்தார்.


 தாயகவலம்

Thursday

இன்றைய இலங்கையில் சாத்தியமான போராட்டம்

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை ஆட்சி செய்த எந்த ஒரு அரசுமே தமிழர்களிற்குரிய உரிமைகளைப் பகிர்ந்துகொள்வதில் இதயசுத்தியுடன் நடந்துகொள்ளவில்லை. அதுமட்டுமன்றி தமிழ், சிங்களம், இஸ்லாமிய , மலையகதமிழர் என அனைத்துத் தரப்பிலும் உள்ள நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ முற்படவில்லை.

Tuesday

மாற்றங்களைத் தேடி....

வடக்கின் வசந்தம்
கிழக்கின் உதயம்
என்றெல்லாம் சிங்கள அரசு பெரிதாக பிலிம்
காட்டும்.
ஆனால் அப்பாவித் தமிழனுக்கு வாய்கரிசியும் கிடைக்காது.
பாவம் சதாரண சிங்களவன். அவனுக்கு அரசாங்கம்

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 7

முன்னைய பகுதிகளை படிக்க








செல்லம், செல்லம் நில்லுமப்பா என்று கொண்டு நான் வாசலுக்குப் பாய இடையிலை நின்ற மச்சான்,
ஓகோ அக்காவுக்குக் கை நீட்டுற அளவுக்குப் போட்டுதோ, இயலுமென்றால் கை வச்சுப்பாருங்கோ, அப்போ தெரியும் இந்த மச்சான் ஆரெண்டதை என்று சொல்லிக்கொண்டு பின்னால் பாய.......
ஏ து இடியோட்டன் ( ஏ மடையருகளே) என்று ஜெனி கத்தின கத்திலைதான் நாங்கள் ஒரு நிதானத்துக்கு வந்தம்.

Tuesday

சிகரங்களைத் தொடலாம்

 எழுத்து
ஒரு தவம்
ஒரு பிரசவம்
ஒரு ஊற்று.

ஒரு சிறந்த எழுத்தாளரின் படைப்புக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அடிக்கடி என்மனம் அசைபோடும்

Thursday

சுயத்தைத் தொலைத்தவர்கள்




எனது பதிவுகளை அதிகமான உறவுகள் ஓடிவந்து படிக்கிறீர்கள்.
அம்பலத்தார் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில் பதில் கருத்துக்களும்
மெல்ல எழுதத் தொடங்கினீர்கள்.
ஆனால் சில துணிச்சலான கருத்துக்களை முன்வைக்கத்தொடங்கியதும்
யாரிந்த அம்பலத்தார்?

Wednesday

களத்தில் எமது போராட்டத்திற்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்திய இலங்கை அரசு
அதையும் தாண்டி ஒன்றுபடும் புலம்பெயர் தமிழரையும் அவர்களது ஒருங்கிணக்கப்படும் அரசியல் நகர்வுகளையும் ஆரம்பத்திலேயே ஒடுக்குவதற்கும் சர்வதேச அளவில் மிகவும் பலமானதொரு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாகச் செயல்படும் விடுதலைப்புலிகளின்
சர்வதேச வலைப்பின்னல் புலம்பெயர் நாடுகளில் தாயகக்கோட்பாட்டை நோக்கிய
அரசியல் நகர்வுகளைச் செய்யவிடாது தடுக்கவும்
தனது பாரிய நரித்தனமான நடவடிக்கைகளைச் செய்யுமென்பது நிச்சயம்.
ஆதலால் நடந்தவற்றை நினைத்துக் கவலைப்படுவதில் காலவிரயம் செய்யாமல் இனிச் செய்யவேண்டியதென்ன என்பதைச் சிந்தித்துச் செயலாற்றவேண்டிய நேரமிது.
எந்த வார்த்தையைக் கேட்க எம்மனம் ஏங்குகிறதோ? ஆசைப்படுகிறதோ? அதை எவர் சொல்கிறாரோ அவர் நல்லவர். எமது மனம் ஏற்க மறுக்கும் யதார்த்தமான கருத்தை முன்வைத்தால் அவன் துரோகி. இந்த இரண்டுக்கும் அப்பால் சிந்திக்கமாட்டம். இந்த இரண்டு எல்லைகளுக்கும் அப்பால் யார் சரியான செயற்பாட்டாளன்? இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? அதை நடைமுறைப்படுத்த முயல்பவர் யார் என்பதைப் பகுத்தறிந்து செயல்படுங்கோ! சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட சமுதாயமாக இராமல் தயவு செய்து தயவு செய்து ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்படுங்கோ!
காலனித்துவகால அரசியல,;
இரண்hடாம் உலக யுத்தத்தை அண்டியகாலம்,
இதன் தொடர்ச்சியாக யுத்தத்தையொட்டித் தோன்றிய ஐநாவின் ஆரம்பகாலம்,
உலக அரசியலில் அணிசேரா அமைப்புச் செல்வாக்குச் செலுத்திய காலம,;
பனிப்போர்க் காலம்,
சோவியத்தின் சிதைவுடன் முடிந்த பனிப்போருக்குப் பிந்திய உலக அரசியல் நகர்வுகள்,
இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப்பிந்திய அரசியல்,
இன்றைய உலகமயமாக்கலுடன் இணைந்த காலம்.
இந்த ஒவ்வொருகாலகட்டத்திலும் பல உரிமைப்போராட்டங்கள் நடந்துள்ளன.
அவற்றின் வெற்றி தோல்விகள், உலக வல்லாதிக்க நாடுகள் இவை சம்பந்தமாக நடந்துகொண்டமுறைகள்..........................
.
இப்படியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு. இந்தப் பெரிய உலகத்திலை ஒருசிறு துளி இலங்கை இதிலை வாழும் ஒருசிறு துளிதான் நாங்கள்.; ஆதலால்
எமக்கு அப்பால் உள்ள இந்தப்பாரிய உலக நகர்வுகளை நாம் ஒவ்வொருவரும் சரியாக புரிந்துகொள்வது தாயகம் நோக்கிய எமது பங்களிப்பிற்கும் சாதகமான நகர்வுகளிற்கும் அவசியமானதாகும்.
வெறுமனே எதிர்கருத்துக்கள்வைப்புது மட்டுமே சிறந்ததாக அமையாது அந்தவகையில் அடுத்த நடவடிக்கைளுக்கான தேடுதல்கள் மிக அவசியமானது.
இந்தவகையில் முதலில் நாம் செய்யவேண்டிய முக்கிய பணி புலம்டிபயர் இளையோரின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதில் எம்மில் சிலர் குளிர்காயள நினைப்பதுடன், அவர்களது தாயம் நோக்கிய செயற்பாடுகளைத் திசைதிருப்பிவிடுவதைத் தடுக்கவேண்டும்.
வீடுபுகுந்து அசிட் அடிக்கும் அளவிற்கு அவர்களை சிந்திக்கமுடியாத
வெறும் இனவெறி ஊட்டப்பட்டவர்களாக மாற்றவேண்டாம்.
புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் இம்மாதிரியான நிகழ்வுகள்
எமக்குச் சாதகமாக அல்லாது, எதிரிக்குச் சாதகமான விளைவுகளையே தரும்.
83 ஆண்டுக்கலவர காலத்தில் பாரிஸ் நகரில்
சிங்கள இளைஞருக்கு எதிராக கத்திக்குத்துப் போன்ற வன்முறைகளில்
ஈடுபட்டதன் எதிர்விளைவுகளை அன்று இளைஞனாக இருந்து நேரில் கண்ட
அனுபவத்தில் சொல்கிறேன் புலத்தில் வன்முறைப்போராட்டம் எமக்குப் பாதகமானது.
தமிழரசுக்கட்சி அதன் பின் வந்த அனைத்துப் போராளி அமைப்பக்கள்
என யாவும் இளைஞர்களை தெளிந்த அரசியல் சிந்தனையும்
தீர்க்கதரிசனமும் கொண்டவர்களாக, போராளிகளாக உருவாக்காமல்,
இன உணர்வுகளைத் தூண்டி
தமது இலக்கு நோக்கிய தெளிவான பார்வையற்ற
வெறும் இன உணர்வுமட்டுமே ஊட்டப்பட்டு
வளர்த்ததுவும் எமது பாரிய பின்னடைவிற்கும். அதன்பின் இன்று ஏற்பட்டுள்ள
அரசியல் வெற்றிடத்திற்கும் எம்மை வழிநடத்த
அடுத்தகட்டத் தலைமைத்துவத் தகுதியுடையவர்கள்
இல்லாதுபோனதற்கும் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது
இளைஞர்கள் எமது சிந்தனைகளிலிருந்துமாறுபட்ட கோணங்களில் சிந்திக்கிறார்கள்.
மாறிவரும் உலகியல் முறைமைகளுக்கும் இன்றைய
புறச்சுhழல்களிற்கும் ஏற்ப நவீன போராட்டவடிவங்களை முன் எடுக்கமுனைகிறார்கள்.
உதாரணமாக ஜனனி ஜனநாயகம் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்குப் போட்டியிட்டதன் மூலம்
லண்டனில் எமது வாக்கு வங்கியன் பலம் ஐம்பதாயிரத்திற்கு மேல் என எடுத்துக்கட்டடியது
வாக்கு வங்கியை நம்பி அரசியல் நடத்தும் இங்கிலாந்து அரசியல் கட்சிகளிற்கு
எம்மை நோக்கிய பார்வையை இந்தநடவடிக்கை திருப்பியிருக்கும்.
தயவுசெய்து இளையோரை அவர்கள்பாணியில் புலம்பெயர் சுhழலிற்கேற்ப அவர்கள் போராட்டங்களைத் தொடரவிடுங்கள்.
கனவுகள் காணலாம் ஆனால் பகற்கனவுகள் காண்பதில் அரத்தமில்லை.
இன்றைய உலக அரசியல் முறைமையில் வல்லரசுகள் அல்லது
வல்லரசுப் பட்டியலில் இடம்பிடிக்கத் துடிக்கும் நாடுகள் தம்மிடையே
ஒருபோதும் நேரடியாக மோதிக்கொள்ளாது அப்படி மோதிக்கொள்ள ஏனைய
வல்லரசுகளின் அரசியல்நகர்வுகள் இடம்கொடாது. ஆனால் வல்லரசுகள்
தமது பலம் பலவீனம் என்பவற்றை வேறுவழிகளில் உரசிப்பார்த்து அறிந்துகொள்ளும்.
எங்கள் பிரச்சனையையும் அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகளுக்கெதிரான
தங்கள் பலத்தை தமது எதிர்ப்பின் வீரியத்தை உரசிப்பார்க்கும் ஒருகளமாகவே
சீனாவும், இந்தியாவும் பயன்படுத்தியிருந்தன. இதில் மேற்குலகைவிட
லோக்கல் சண்டியர்களின் கை ஒங்கி இருப்பதையே இலங்கைவிடயத்தில்
எதுவும் செய்யமுடியாமலும் அதை வெளியே காட்டிக்கொள்ளவும் முடியாமலும்
கைபிசைந்து நிற்கும் மேற்குலகின் நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.

Tuesday

வன்னிக்காற்று வீசும் செய்தி.

 
பால் இல்லையா? பழம் இல்லையா?
பருக்கையற்ற கஞ்சியேனும் தா! எனக்
கதறிடும் மழலைகள்
மழலைகள் முகம்பார்த்து வாடிடும்
மங்கையர் இதயங்கள்.

கைதாகிக் கொலையுண்ட
காளையர் கன்னியர்
வேதனைக் கண்ணீருடன் அன்னையர் தந்தையர்

கல்வித்தடையால்
கவலையுறும் பாலகர்
மருந்துத்தடையால்
அவதியுறும் பிணியாளர்
வன்னிக் காட்டின்
இன்றைய நிகழ்வுகள்
கந்தலோ கோணியோ உடையாக
காயோ கிழங்கோ உணவாக
இலையோ வேரோ மருந்தாக
மரமோ மதிற்சுவரோ வீடாக

மரணப்படுக்கையில்
கையது கொண்டு மெய்யது பொத்தி
சுருண்டுகிடந்திடும் ஒருவர்
ஈனஸ்வரத்தில் முனகிடும்
வார்த்தைகள் சில இதோ!

"வன்னிப் பாதையில்
வந்திடும் வழிப்போக்கா
நின்றிடு சிலகணம்
மூடிவிடு என் விழியை
அடக்கம் செய் என் உடலை
விலங்கும் பறவையும்
இழுத்துப்போகுமுன்

ஆயிரம் வேட்டலில் சிறந்தது
அனாதைப் பிணத்தை அடக்கம் செய்வது
இருவரும் நாங்கள் ஈழத்தமிழரடா! 
தொப்புள் கொடிச் சொந்தமடா!"

புலம் பெயர்ந்திங்குவாழ் எம் உறவுகளே
கேட்குதோ உம் காதில் வன்னிக்காற்று
எமக்கு வீசிடும் செய்தியை
தட்டுங்கள் உங்கள் மனக் கதவுகளை
திறக்கட்டும் சிறிதேனும்.

................................................................
இந்திராணி திருநாவுக்கரசு.

Thursday

யாழ்பாணிய மேலாதிக்க அரசியலால் இழந்ததுபோதும்.

தளர்ந்து வரும் யாழ் குடா நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர்கள் மீதான யாழ்ப்பாணத்தாரின் மேலாதிக்கம்.

இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்று ஆரம்பகாலம்தொட்டே யாழ்ப்பாணத்தாரின் ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் மீதான மேலாதிக்கம் என்பது இருந்து வந்துள்ளது. இந்த மேலாதிக்கம் என்பது தமிழ் அரசியல்வாதிகளையும் தாண்டிச் சாதாரண குடாநாட்டுமக்கள் மத்தியிலும் சர்வசாதாரணமாக ஆழப்பதிந்திருக்கிறது. தோட்டக்காட்டான், வடக்கத்தையான், மட்டக்களப்பான், வன்னியான் போன்ற ஏளனமான சொற்பதங்கள் மூலம் தமது மேலாதிக்கத்தைக் கூறிக்கொள்வதில் குடாநாட்டாருக்கு ஒரு அலாதிப்பிரியம்.

Monday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 6


நான் லைற்றை அணைக்க,

செல்லம்மா என்னை அணைக்க,

என்ரை வாய் சும்மா கிடக்கமாட்டாமல்

செல்லம், எனக்கு அப்பவே சந்தேகமா கிடந்தது.

என்னப்பா.

Friday

வாழ்க கூகிள். ஜாலிதான் நான் கடலைபோடுற குட்டியளின்ரை விபரமெல்லாம்.........



இஞ்சருங்கோ சொல்ல மறந்துபோனன் புறோக்கர் தொலைபேசினவரப்பா,

உவள் எங்கட மூத்தவளுக்குப் பேசின மாப்பிளைவீடடுக்காரர் ஊரில வடிவா விசாரிக்கவேணுமென்று உங்கட பேரன் பேத்தியின்ரை பெயர் ஊர் மற்ற விபரமெல்லாம் கேட்கினமாம்.

என்னது ஊரிலை விசாரிக்க வேணுமாமோ?

ஓமப்பா பொன்னர், அம்பலத்தார் என்று உங்கட பெயரைப்ப் பார்க்க நாங்கள் தங்கட சாதி ஆக்களில்லையோ என்று யோசிக்கினமாம்

Wednesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5

வேறு பல அலுவல்களிலும் கடந்த சிலநாட்களாக blog பக்கம் தலைகாட்டமுடியவில்லை அதுதான் மிகுதிக் கதையைச் சொல்லக்கொஞ்சம் தாமதமாகிவிட்டது, திட்டுவதற்குமுதல் தொடர்ந்து படியுங்கோ அதற்குப்பிறகு சொல்லவேண்டியதை சொல்லிவிட்டுப்போங்கோ. என்ன deal ok. தானே

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5

நான் வந்து ...........செல்லம்மா .......

நீங்கள் வந்திட்டியள் அது தெரியும்.

Thursday

நான் போகாத சாமத்தியச்சடங்கு

இன்றைக்குப்போல கிடக்கு எழுபதுகளின் ஆரம்பத்திலை கொழும்பு ரொறிங்ரன் அரசாங்க தொடர்மாடிக் குடியிருப்புக்களில் வாழ்ந்த காலம். எத்தனையோ நாடுகளிலை அடுக்குமாடிக் குடியிருப்புக்களைப் பாத்திருக்கிறன் ஆனால் இந்தமாதிரி ஒரு அமைப்பை நான் பாத்ததே இல்லை. சுற்றிவர வீடுகள் நடுவிலை ஒரு மைதானம் அத்தனை வீடுகளின்ரை பல்க்கனியிலை நின்றும் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கலாம்.
சாயங்காலமானால் மைதானம் களைகட்டும். கிரிக்கற், உதைபந்தாட்டம் வொலிபோல். சின்னவயசுக்காரர், விடலையள், பெரியவை என பல குழுக்களாக மைதானம் நிறையும். இதைவிட அங்கங்கை சிறுசிறு கொத்துக்களாக இளவட்டப் பெண்கள் கூட்டம். மைதானத்தின் ஓரமா இருந்த கிளப்பிலை பெரிசுகளின்ரை சீட்டாட்டம், பியர் அடி என ஒரே கலகலப்பா இருக்கும்.

Wednesday

ரெபேக்கா வீட்டுக்கு போகிறேன்


அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக அவர் அப்படியேதான் இருந்தார்.

Monday

காலம் செய்த கோலம்.



அமைதியாப் போய்க்கொண்டிருந்த காலத்திலை ஒரு புயல். ஜே.வி.பி. இன் அரசுக்கெதிரான புரட்சி. இதன் அரங்கேற்றகாலத்தில் கலகெதற எனும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் கிராமத்தில் மாட்டிக்கொண்டன்.

Saturday

மனிதனே.....மனிதனாய் வாழ்ந்திடு......!



உடுக்கை நழுவின்
கை பார்த்திருப்பதில்லை
ஒரு கண் அழ
மறு கண் சிரிப்பதில்லை
இனம் தேடி மலர்
மணம் பரப்பவில்லை

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 4

ஐயோ! இதென்ன கடவுளே நிலமெல்லாம் ஒரே ரத்தம், கட்டிலெல்லாம் தோஞ்சுபோய்கிடக்கு.

எவன் எவளைக் கொண்டானோ, நான் பாவி வசமா வந்து மாட்டுப்பட்டிட்டனே, கடைசியிலை ஒன்றையும் அனுபவிக்காமலுக்கு இப்பிடி அற்ப ஆயுசிலை ஜெயிலுக்கை போய்க் கிடக்கவேணுமே என்று பதறத்தொடங்கினன்.

Thursday

இலக்கை நோக்கிய பயணம்


எங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கிய

அந்தக் கொடிய வைகாசி 17......

பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும்,

எமது கனவு,

எமது இலட்சியம்

எமது ஏக்கம்,

எமது கொள்கை,

எமது அமைப்பு,

Wednesday

மதம் பிடிச்சு அலையுறமா?


இந்த வயதுபோன காலத்திலையும் அம்பலத்தாரின் லொள்ளைப் பாருங்கோ! எப்பபார் விவஸ்த்தை இல்லாமல் அந்தமாதிரிக் கசமுசா கதைகளாக எழுதிக்கொண்டு என கொஞ்சச்சனங்கள் கிசுகிசுப்பது எனது காதிலையும் விழுந்தது. அதுதான் இன்று கொஞ்சம் வித்தியாசமான ஒரு விடயத்தைப்பற்றிச் சொல்லவாறன்

Tuesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 3



தலைவிதியை நொந்துகொண்டு வேலைக்குப் போனால் ........ வாசலிலை உவள் ஜெனி ஏதோ பேருக்கு போடவேணுமெண்டதுக்காக ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு அசத்தலாய் நிண்டாள். அட இண்டைக்குப் பொழுது வெய்யிலும் வெக்கையுமாக அந்தமாதிரித்தான் விடிஞ்சிருக்கு என்று புளுகமாக் கிடந்தது, உங்களுக்கும் உவள் ஜெனியைப் பற்றிச் சொல்லுறதுக்கு நிறையக் கிடக்கு ஆனால் இப்ப இல்லை,

Monday

ஜாலியான கொள்கைகள்...................................?



காலையில எழுந்து சோம்பல்போகாதவனாக
சோபாவில் சாய்ந்தபடி ஜன்னலுக்கால தெருவில போறவாற சனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன்.
என்ன அது இன்றைக்கும் காலங்காத்தாலை சோபாவில உட்கார்ந்து காலை ஆட்டினபடி............

Saturday

பழிக்குப் பழி கொலைக்குக் கொலை

 ஒரு ராஜீவ்காந்தியைக் கொன்றதற்கு மூவரிற்கு மரணதண்டனையென்றால் 
பல ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்ல அனுமதிகொடுத்த ராஜீவ்காந்திக்கு ஒரு மரணதண்டனை கொஞ்சம் கம்மிதான். 
சரி அவர்தான் ஏற்கெனவே போய்விட்டார் விட்டுவிடுவம். 

அந்த அழகிய பிறந்ததினப் பரிசுகள்!

எங்கள் மகள் சௌம்யாவையும்,சாராவையும் கூட்டிக்கொண்டு பாலர் பாடசாலை போகிற நாட்களிலெல்லாம் பிஞ்சு விரலைப் பிடித்து மண்ணில் 'அ ' எழுதிய காலங்கள் என் மனத்தில் மின்னி மின்னி மறையும். அதைப் பிள்ளைகளுக்குச் சொன்னால் "அப்ப நீங்கள் படித்த Kinder garden ல் 5,6 விளையாட்டுச்சாமான் கூட இல்லையா" என்று பிள்ளைகள் அனுதாபத்துடன் என்னை ஒரு பார்வை! பிறகு அண்ணணும் தங்கையுமாக ஏதோ குசுகுசுப்பு!

Thursday

என்ன படிக்கலாம்? ரொம்பவும்தான் முடியைப் பிச்சுக்கவேண்டாம்.


மொக்கைப் பதிவுகளால் நிரப்பப்படும் பதிவுலகில் அப்பப்போ இந்தமாதிரிச் சில நல்ல பதிவுகளையும் காணக்கிடைப்பது சந்தோசமாக உள்ளது. பாடசாலைக் கல்வியைமுடித்துவிட்டு அடுத்து என்ன மேற்படிப்புப் படிக்கலாம் என்று யோசிக்கும் இளைஞரின் முதல் தெரிவாக இருப்பது தகவல்தொழில்நுட்பத்துறைதான்.

Wednesday

ஒட்டகத்தோடு குடித்தனம்.


விடுமுறை நாளும் அதுவுமா பொழுதே போகாதாம்
எதாவது படிக்கலாம் என்ற எண்ணத்தில
அலுமாரியிலை இருந்த புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன்.
ஏதோ ஆளரவம் கேட்குதென்று மெல்லத் திரும்பினால்
என்னகாணும் கொஞ்சமென்றாலும் பொறுப்பில்லாமல் வாசக்கதவை ஆவென்று திறந்துவிட்டிட்டிருக்கிறீர்.

Monday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2



வளுமோ விடாமல் உங்கட ஆசையளுக்குக் குறுக்காலை நான் எப்பவாவதுநின்றிருக்கிறனே என்று கொஞ்சலாகக் கிசுகிசுத்தாள். இதுபோதுமே பிறகென்ன ஐயா வழமைபோல.........................  அதுக்கடையிலை ரெலிபோன் வேற கிணுகிணுக்கத் தொடங்கிச்சுது.ஆரடா இது சிவபூசையுக்கை கரடி பூந்த மாதிரி ஏமசாமத்திலை என்று எரிச்சலாப் போனை எடுத்தால்.

Friday

Mc Donalds & Dunkin coffeeshop



இன்றைய அவசர உலகில் உயிர்வாழத்தேவையான உணவைக்கூட ஆற அமர இருந்து சமைத்துச் சாப்பிட நேரம் ஒதுக்க எம்மிடம் போதிய நேரமில்லை. இதனால்தானே Mc Donalds, PIZZA HUT, Burger king, Kentuky chicken, Dunkin coffee shop உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கின்றன.
துரித உணவென்றாலே குழந்தைகள்முதல்  அனைவருக்கும் ஞாபகத்திற்குவருவது Mc Donalds.
துரித உணவக  உலகில் அதிக விற்பனைநிலையங்களுடன் முன்னணியில் நிற்பதும் Mc Donalds என்றுதானே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உலகிலேயே மிக அதிக கிளைகளைக்கொண்ட
துரித உணவகம் Dunkin coffee shop என்று சொன்னால் நம்பமுடியவில்லையா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். புள்ளிவிபரங்கள் அப்படித்தான்
தெரிவிக்கின்றன. Mc Donalds என்று
சொல்லும்போதுதான் இந்தச் சுவாரசியமான விடயகும் ஞாபகத்திற்கு வருகிறது.

நானும் தொழில்ரீதியாக அடிக்கடி பிரயாணங்கள் செய்யவேண்டியிருப்பதால் அவ்வப்போது துரித உணவகங்களே எனக்குத் தஞ்சம்.
ஜேர்மனியில் எந்த ஒரு Mc Donalds இற்குச்சென்றாலும் பெரும்பாலும் ஒரு ஈழத்தமிழராவது வேலை செய்வார்.
சிறிதுகாலத்திற்குமுன் அலைந்த அலுப்புடன் ஒரு Mc Donalds இற்குள் புகுந்தன். உணவை வாங்கலாமென்று போய் நின்றால் அரை கிரவுண்ட் நிலமளவிற்கு தலையில் பெரிய வெளியா மொட்டந் தலையோட........ அட நம்மவயசுதான்போல மூக்கும் முழியும் அந்த பால்கோப்பி நிறமும் நிச்சயமாக நம்மநாட்டுக்காரர்தான். சட்டென்று வணக்கம் அண்ணா 2 Burger ம் ஒரு கோலாவும் என்று தமிழிலை சொன்னன்.  அவர் புரியாதமாதிரி உங்களிற்கு என்ன வேண்டும் என ஜேர்மன் மொழியில் கேட்டார். சட்டென மார்பிலுள்ள பெயர்ப் பட்டியைப் பார்த்தன் திரு.சுப்பிரமணியம் என்றிருந்தது. கேட்கவில்லைப்போல என நினத்துக்கொண்டு மீண்டும் தமிழிலே விருப்பத்தைக் கூறினேன். அவரோ திரும்பவும் ஜேர்மன் மொழியில் என்ன வேண்டும் எனக்கேட்டார். சுதாகரித்துக்கொண்டு ஜேர்மன்மொழியிலேயே உரையாடி வாங்கிக்கொண்டுபோய் இருக்கையில் அமர்ந்தால் திரு.சுப்பிரமணியம் அந்தப்பக்கமாக மறைவாக நின்று வேலைசெய்துகொண்டிருந்த சக தொழிலாழியுடன் நல்ல யாழ்ப்பாணத்தமிழில் உரையாடிக்கொண்டிருந்தார். இப்படியான ஆட்கள் இருக்கும்போது எப்படி தமிழ் இனி மெல்லச் சாகும் என்று சொல்லுவது. தமிழ் இனி விரைவாகவல்லோ சாகும்.
 இப்படித்தான் மற்றுமொரு தடவை இன்னுகொரு Mc Donald  இல் பார்க்கிறதற்கு நல்ல அம்சமாக இளவயசும்  துரு துரு கண்களும் கலரும் மூக்குமின்னியும் நிச்சயமாக பிள்ளை நம்ம நாடுதான். மார்புப்பகுதியை நோட்டம்விட்டால் பெயர்ப்பட்டியில் சிந்து ஷன்முகம் அட நம்மாள்தான் என்று தமிழிலை கதைத்தால் இங்கேயும் மீண்டும் அதே பல்லவி. நொந்துபோய் தேவையானதை வாங்கிக்கொண்டு தங்கச்சி நானும் இந்த நாட்டிலை சொந்தமாக ஒரு தொழில் நிறுவனம் வைத்திருக்கிறன். என்ரை நிறுவனத்திற்குத் தப்பித்தவறி தமிழ்வாடிக்கையாளர் யாராவது வந்தால் அவர்களுடன் தமிழிலைதான் உரையாடுகிறனான் என்று ஜேர்மன் மொழியில் சொல்லிப்போட்டு நடந்தன்.
இரண்டு ஜேர்மன்காரன் , இரண்டு ஜப்பான்காரன் அல்லது 2 சீனாக்காரன் சந்திக்கும்போது தங்கள் தாய்மொழியிலைதானே கதைக்கிறார்கள் எமக்குமட்டும் ஏன் இந்தக் கூச்சம் தாழ்வுமன்ப்பான்மை.
இன்னுமொருவிடயம் அமெரிக்காவின் கடனைத் திருப்பிக் கொடுப்பது சம்பந்தமான நம்பகத்தன்மை குறைத்து மதிப்பிடப்பட்டதன்பின் அமெரிக்கப் பங்குச்சந்தை மட்டுமன்றி ஐரோப்பியப் பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இதைத் தடுத்துநிறுத்த ஜெர்மன் அதிபரும் பிரன்சு அதிபரும் கூடிப்பேசி எதோபெரிய முடிவு எடுக்கப்போவதாக பில்டப் கொடுத்தாங்கள் கடைசியிலை அவர்களின் கூட்டறிக்கையில் பெரிதாக ஒன்றையும்காணன். தங்கம் ராக்கெட் வேகத்தில் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. தங்கத்தில் முதலிட்டிருந்தவர்களிற்கு வெள்ளிதிசைதான் இதுவரை தங்கத்தை நம்பாதவை கண்டதிலும் முதலிட்டு மோசம்போகாதையுங்கோ. இப்பகூட உபரிப்பணத்தை தங்கத்தில் முதலிடுங்கோ, அல்லது நல்ல மலிவாகக்கிடைத்தால் நிலத்தில் அல்லது கட்டிடத்தில் முதலிடுங்கோ போட்டமுதலுக்கு மோசம்வராது.
கிரீஸ் மனிதரின்ரை பிரச்சனையாலை தாயகத்திலை சனங்கள் இசகு பிசகாக மாட்டித் தரும  அடிகிடைக்குமோ என்ற பயத்தில் ஒரு அவசரத்திற்குக்கூட தெரியாத இடத்திற்குப் போகப் பயப்படுகிறார்கள். சீனா இந்தியா அமெரிக்கா ஐரோப்பா என ஒருவருக்கும் பிடிகொடித்து மாட்டுப்படாமல் வழுகிக்கொண்டு திரிகிற ராஜபகச குடும்பம்தான் கிறீசிலையே ஊறினவர்கள் தெரியுமோ?
 ரொம்பவும்தான் அறுத்திட்டனோ நொந்து நூலாகிப்போனியளோ? தப்பினால்காணும் என்று ஓட்டம்பிடிக்காதையுங்கோ. இத்துடன் இன்றைக்கு முடிட்துக்கொள்கிறேன் மீண்டும் நாளை சந்திப்போம்

கஞ்சன்



நாட்டுநடப்புகள் தந்த மனஅழுத்தத்தில சோம்பலோட சோபாவிலை சாய்ந்திருக்க
கிணிங்ங்ங்................................ அழைப்புமணி.
சலிப்போடபோய் கதவைத்திறந்தால் வழமைபோல ஒட்டகத்தார்தான்.
நான் என்னவாக்கும் இந்த நேரத்திலை என்று யோசிக்க
ஒட்டகத்தாரே விசயத்தைச் சட்டென்று போட்டுஉடைச்சார்.

Wednesday

சமுதாயச் சீர்கேடுகளும், சந்ததி இடைவெளிகளும்












சமீபகாலமாக பிறந்த குழந்தையைக்கிணற்றில் வீசிய தாய், அதிகரிக்கும் இளவயதுக் கர்ப்பங்கள்,யாழில் கருக்கலைப்புவிகிதம் அதிகரிப்பு, என்ற செய்திகளும் நமது கலாச்சாரமே பாழாகிறது என்ற கோசங்களும் எமது செய்தி ஊடகங்களில் இடம்பெறாத நாளே இல்லை எனலாம்.

உண்மையிலேயே நமது சமூகம் பாழ்பட்டுப்போகிறதா?

மாறிவரும் மேற்கத்தைய உழைக்கும் மக்களின் மனநிலை.


மேற்கத்தைய நாடுகளில் வாழும் சாதாரண மக்கள் அதிகமாக உழைத்து முன்னேறுவதற்கும் தங்கள் பொருளாதாரநிலையை உயர்த்திக்கொள்வதற்கும் உரிய வாய்ப்புக்கள் அண்மைக்காலங்களில் மிகவும் அரிதாகிக்கொண்டுவருகிறது. உலகமயமாக்கல் 

Monday

சொல்லாதே யாரும் கேட்டால் ..........



விழுந்திடிச்சு! விழுந்திடிச்சு!
செல்லம் ஏ! செல்லம்மா தண்டத்துக்கு வெட்டாதையுங்கோ! விழாது விழாது எண்டு கரிச்சுக் கொட்டினாய் இஞ்சை பார் ஐயாவுக்குப் பம்பரே விழுந்திட்டுது.
உங்கட புளுகு தெரியாதாக்கும் 10 ருபாக்கு வெட்டி 5 ருபா விழுந்தாலே ஊரைக் கூட்டுறனிங்கள்; இண்டைக்குப் 10க்கு வெட்டி 20 விழுந்திட்டுதாக்கும்.

Saturday

இந்த ஊருக்கு வயது 800 ஆண்டுகளிற்குமேலே.


அண்மையிலே ஜேர்மனியின் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றான Idstein  நகரிற்குச் செல்லும் வாய்ப்புக்கிடைத்தது. இங்குள்ள கட்டிடங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானதாகக் காணப்படுகிறது. ஒன்றுபோல மற்றொன்று இல்லை. லண்டன் மாநகரத்திலும் பழைய கட்டிடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் அங்குள்ள பழைய தெருவொன்றிற்குச் சென்றால்  தெருவிலுள்ள அத்தனைவிடுகளும் பெரும்பாலும் ஒரேமாதிரியானதாகவே இருக்கும்.
வரலாற்றுச்சான்றுகள் இந்த ஊர் Idstein 1102 ம் ஆண்டில் தோற்றம்பெற்றதாக்க தெரிவிக்கின்றன. நகரின் பெரும்பாலான கட்டிடங்களும் புராதனச்சின்னங்களாக ஜேர்மனிய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இக்கட்டிடங்களை பேணிப்பாதுகாத்துப் பராமரிக்கமுடியாத உரிமையாளருக்கு அவறைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் பொருளாதார உதவி செய்கிறது.
நம்ம நாடுகளில் புராதன கட்டிடங்களில் இருந்து கதவுகள்,வேலைப்பாடுமிக்க தூண்கள், சிற்பங்கள் என எவை எவற்றையெல்லாம் பெயர்த்து எந்த நாட்டிற்குத் திருட்டுத்தனமாக எற்றுமதிசெய்து கொள்ளை லாபம் அடிக்கலாம் என்பதிலேயே பலரும் கண்ணாயிருக்கிறார்கள்.  
Idstein இல் உள்ள  மிகவும் புராதனக் கட்டிடமாக 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கண்காணிப்புக் கோபுரம் காணப்படுகிறது. இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை 1400 முதல் 1700ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவையாக இருக்கின்றன.  இந்த ஊரிலேயே நான் பார்த்ததில் மிகவும் பழைய வீடு 1449 இல் கட்டப்பட்டது. 
 இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தமக்குள்ளே எத்தனை எத்தனை கதைகளையும் வரலாறுகளையும் கொண்டிருக்குமோ? இவற்றில் குடியிருந்தவர்கள் ஒல்லியோ குண்டோ, அழகோ, ஆண்டபரம்பரை வந்தவரோ, அடிமையோ,அந்நியதேசத்தை அடிமைகொள்ளச் சென்றவரோ, இங்கு ஆடவரும் பெண்டிரும் எப்படியெல்லாம் கொஞ்சிக்குலாவி மகிழ்ந்திருப்பரோ. இந்தவீடுகள் பேசினால் எத்தனை எத்தனை கதைகள் சொல்லியிருக்கும்.               
ஊரின் அழகையும் கம்பீரத்தையும் கெடுக்கும்விதமாக இந்த இடத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாமல் தெருவோரம் தரித்திருக்கும் வாகனங்கள் எரிச்சல் தருகின்றன.
ஓ ரொம்பவும்தான் அறுத்திட்டனோ? கோவித்துக்கொள்ளாமல் பார்த்து ரசியுங்கோ.

Thursday

கொம்பியூட்டர் விற்பனைக்கு

இது கொஞ்சம் விவகாரமான விசயம்தான் 
ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன்.
என்ரை அவகொஞ்ச நாளா ‘இஞ்சாருங்கோ 
எங்களுக்கு முந்தி வந்ததுகளெல்லாம் 
சொந்தவீடு, சிட்டிசன்சிப் எண்டு ஒரு பந்தாவோட இருக்குதுகள். முந்தநாள் வந்ததுகள்கூட இன்ரநெற், ஈமெயில் எண்டு பீத்திக்கொண்டு திரியுதுகள். ஒரு சபை சந்திக்குப்போனால் எனக்குச் சொல்லுறதுக்கு ஒரு விசயம்கூட இல்லாமல் வெக்கமாக்கிடக்கப்பா, இப்படியே போனால் ஒரு சனமும் எங்களை மதியாதுகள்.

Monday

மத்தியஸ்தம் - மீண்டும் தமாசானதொரு கதை

எனக்கும் ஒட்டகத்திற்கும் இடையில்..

மீண்டும் தமாசானதொரு கதை

திட்டின கோபம் அடங்காத ஒட்டகம் என்னுடன் சேர்ந்து பேருந்தில் ஏறினாலும்கூட
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இருந்த பேருந்தில்
எனக்குப் பக்கத்தில் உட்காராமல் நான்கு ஐந்து இருக்கைள் தள்ளி உட்கார்ந்தது.
கொஞ்ச நேரத்திலை சரிவரும் என்றால்
வராதாம்.

Saturday

ஒட்டகத்தைத் தேடி


நேரம் 15.20

பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான்.
எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால்,
ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது.
குட்டிபோட்ட பூனைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ்
ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப்
பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன்.

Friday

எகிப்திற்குத்தான் போகமுடியவில்லை இதையாவது பார்த்து ரசிப்போமே.



நான் பார்த்த இந்த இடதைப்பற்றி
இந்தப் புராதன மேசை கதிரையில் உட்கார்ந்து


இப்படியான ஒரு புராதன தட்டச்சு இயந்திரத்தில் எழுதிப் பிரசுரித்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை தோன்றியது ஆனால் நிறைவேற்றத்தான் முடியவில்லை.





ஐரோப்பிய கூட்டமைப்பிலுள்ளா நாடுகள் ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்ட வருவாய்க்கான மூலாதாரங்களையும் தந்திரோபாயங்களையும் கொண்டிருக்கின்றன. இந்தவகையில் ஸ்பெயின் நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாக உல்லாசப்பயணத்துறை விளங்குகிறது. சும்மா சொல்லக்கூடாது ஸ்பெயின் சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக கவர என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறதென நேரில் சென்று பார்த்தால்தான் புரியும். 


இந்த இரண்டுதுண்டுக் கல்லுகளுக்குத்தான் இந்தப்பெரிய எடுப்பெல்லாம்
எகிப்திலிருந்து கொண்டுவந்த மிகவும் புராதன கட்டிடச் சிதைவொன்றின் எச்சங்களை காட்சிப்படுத்த எகிப்தியக் கட்டிட அமைப்பில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சுற்றுலாமையத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். யான் பெற்ற இன்பதை இவ்வையகமும் பெறவேண்ண்டும் என்ற cண்ணத்தில் கிளிக்பண்ணிக்கொண்டு வந்ததை நீங்களும் கொஞ்சம் பார்த்து ரசியுங்களேன்.
















ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்

இரகசியமாக உங்களுக்குமட்டும்

 ஒட்டகம் புகுந்த வீடு 2





பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்று
முற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன்.
எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும் நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவர
கொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர் ஊற்றுவதில் தீவிரமானன்.
சில நொடி தாண்டியிருக்காது.
அண்ணை! அண்ணை!

Wednesday

இவர்களின் கதை சுவாரசியமானது 2

நிச்சயமாக ஒரு சில மணித்துளிகள் உங்களுடன் இணைந்து
இருப்பது எனக்கும் சந்தோசமே என்று நான் கூறியதும்
அவர்களில் ஒருவர் நீங்கள் எவ்வளவு காலமாக ஐரோப்பாவில் வசித்துவருகிறீர்கள் என்றுகேட்டார்.
1982 ஆம் ஆண்டு இதே மட்ரிட் விமானநிலையத்தில் முதன்முதலாக வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகியதுதான் எனது இந்த அகதி வாழ்க்கை என்று கூறவும்.
அப்படியாயின் எங்கள் வாழ்வைப் புரிந்துகொள்வது உங்களிற்கு இலகுவாக இருக்கும்
எண்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில்தான் ஐரோப்பாவில் போதைப்பொருட்களின் பாவனை உச்சத்தில் இருந்த்து. அந்த நாட்களில் ஐரோப்பாவில் வாழ்ந்த இளைஞர் யுவதிகளில் 60% வீதத்திற்குமேற்பட்டவ்ர்கள் ஒருமுறையேனும் போதைப்பொருட்களைப் பாவித்திருக்கிறார்கள் எனப் புள்ளிவிபரமொன்று தெரிவிக்கிறது. 
நாங்கள் நின்றுகொண்டிருக்கும் இந்த வீதி 
இப்பொழுது இருக்கும் தோற்றத்திற்கு 
முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் பின் இரவு நேரங்களில் காணப்படும்.
ஆமாம் நானும் அதைப் பார்த்திருக்கிறேன்
. விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதையும் மதுபோதை நிறைந்த மக்கள்வெள்ளத்தையும் போதைப்பொருட்களில் தன்னிலை மறந்திருக்கும் மக்களையும் கண்டுவியந்திருக்கிறேன் என்று கூறவும்
நன்றாக அவதானித்திருக்கிறீர்கள். 
80 களில் இதைவிட மிக இலகுவாகவும் 
மலிவாகவும் போதைப்பொருட்கள் 
கிடைக்கும். இளைஞராக இருந்த எமக்கு குணா என்றொரு உங்கள் நாட்டவரின் நட்புக்கிடைத்தது. சில நாட்களில் அவர் போதைப்பொருட்களை மொத்தமாக விற்பனை செய்பவர் என்பது தெரியவர அவரிடமிருந்து அதை வாங்கி பாவனையாளரிற்கு விற்கத்தொடங்கினோம்.
இடையில் புகுந்து நானும்  .ஆம்  அன்றைய நாட்களில் நம்மவர் பாகிஸ்தானிலிருந்து இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளூடாகப் பெருமளவில் போதைப்பொருட்களை ஐரோப்பாவிற்குக் கடத்தியதை நானும் அறிந்திருக்கிறேன் என்றேன்.
பார்த்தீர்களா உங்களவர்களைப்பற்றி நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறீர்கள் என்ற மற்றவர் தொடர்ந்து,  
நாளடைவில் எமக்குக் கீழ் ஒரு பெரிய குழுவே வேலை செய்தது. பணத்தில் மிதந்தோம் தினத்திற்கொரு அழகிய பெண்களுடன் நட்சத்திரவிடுதிகளில் உல்லாசம். புத்தம்புதுக் கார்கள் அடியாட்கள் என ஒரு சினிமாப்படம்போல எமது வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.
இதே இந்தச் சந்தடிமிக்க தெருவில் போட்டிக்குழுக்களுடன் மோதிக்கொண்டதற்கு ஆதாரமாக இன்னமும் இருக்கும் இந்தத் தழும்புகளைப் பாருங்கள் என மற்றவர் தனது உடம்பிலிருந்தபல வெட்டுக்காயத் தழும்புகளக் காட்டினார்.
நாளடைவில் .....

இவர்களின்கதை தொடரும்...............