நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Saturday

ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ!



எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை.
அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும்
அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும்.

Tuesday

நாங்களும் எங்கட விலாசங்களும் படுகிறபாடு (பகுதி 2)



நண்பர் சொன்னதுபோல போனால் ....

மக்டொனால்ஸ் வந்தது ..

அப்புறம் ஆ.. அப்படியே கொஞ்சத்தூரம்  ஓட....

அப்படா ஒரு  சுப்பமார்க்கட் வந்தது ..

எல்லாம் சரியாகத்தான்  இருக்கே என்று இறங்கி அவன் சொன்னதுபோல பின்பக்கமாக  நடந்தால்...

ஒரு நீலக்கட்டிடடமும்   காணோம் !

Friday

நாங்களும் எங்கட விலாசங்களும் படுகிறபாடு.


எங்களது ஆட்கள் எதாவது ஒரு நிகழ்வு நடைபெறும் மண்டபம் ஒரு வீடு ஒரு கடை என எந்த ஒரு இடத்தின் முகவரியை சொல்லுறதென்றாலும் ரொம்பவும் விபரமாக சொல்லிடுவாங்க.

 என்ன ஒரு சோகமென்றால் அவங்க சொல்லுறபடி அந்த இடத்தை தேடிப்பிடித்து போகிற வல்லமை எனக்கில்லை. இப்படி நான் விலாசம் தேடின கதையளை உங்களுக்கெல்லாம் சொல்லி ஒருவாட்டி ஓவென்று அழுதால்தான் என்ரை மனசு ஆறும்.

Thursday

அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவன் 18+ கலாட்டாக்கதை

ஜெகாவிற்கு கொழும்பு வந்ததில் செம சந்தோசம். இருக்காதா என்ன வாழ்நாள் கனவாச்சே. நாட்டிலை இடம்பெற்ற போரினால் வன்னிக்கு அப்பால் வேறு எந்த ஊருக்கும் இதுவரை அவனால் போகமுடியவில்லை. இப்ப சண்டை முடிஞ்சதுக்கு அப்புறம் Friends  எல்லோரும் பல இடங்கள் சுத்தி வாறதை பார்க்க ஜெகாவுக்கும் ஆசை அதிகமாகி அப்பாவிடம் கேட்க பயத்திலை, அம்மாவை நச்சரித்துக்கொண்டே இருந்தான். அம்மாவும் இந்த சாட்டுடனாவது ஒருதடவை கொழும்பு பார்க்கலாம் என்ற நப்பாசையிலை அப்பாவுக்கு கொடுத்த அலுப்பிலை, அப்பாவும் பெரிய மனதுபண்ணி, ஜெகா 10 ம் வகுப்பு பாஸ்பண்ணினால் கொழும்பு கூட்டிப்போவதாக ஒத்துக்கொண்டார். 

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 9



முன்னைய பகுதிகளை படிக்க
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 7
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 6
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 4
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 3
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2 
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 1


 சொல்லாதே யாரும் கேட்டால் .......... 9


"இஞ்சருங்கோ என்ன அதுக்குள்ள............... நான் பக்கத்திலை வந்ததுகூடத் தெரியாமலுக்கு......."

"காலமை எழும்பினதிலையிருந்து அரக்கப்பரக்க வேலை செய்த அலுப்பிலை ஒரு ஐஞ்சு நிமிசம் கண் அயரமுதல் இப்ப என்ன நடந்ததென்று உந்த உலுப்பு உலுப்புறீர்."

"அது வந்தப்பா ..... நானும் என்ரை ஆசையளை உங்களிட்டைச் சொல்லாமல் வேற யாரட்டைத்தான் சொல்லுறது......" என்று செல்லம்மா தொடங்க

"அட உம்முடைய ஆசையெண்டால் அது என்ரை ஆசைமாதிரித்தானே" என்று கொண்டு கன்னத்திலை ஆசை ஆசையாக ஒன்றுகுடுக்க

"ஒரு சொல்லுச் சொல்ல முந்தி இப்படி வழிஞ்சுகொண்டு வாற உங்களோட யாரும் கதைக்க இயலுமே" என்று மனுசி செல்லமாக சிணுங்க..................


Wednesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8




முன்னைய பகுதிகளை படிக்க 

சொல்லாதே யாரும் கேட்டால்...........7 



சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8

"உங்கட சண்டைகளாலை கடைசியிலை என்ரை நாயைக் கொன்றுபோட்டியளே!" என்று ஜெனி கத்தவும்தான் விளங்கியது, உவள் பாவி இவ்வளவு நேரமாக நாய் செத்த கவலையிலைதான் அழுதிருக்கிறாள் என்று. கடவுளே இப்பவாவது புரிஞ்சுதே. இனி மனிசியை வழிக்குக் கொண்டுவாற வழியைப் பார்ப்பம் என்ற எண்ணத்திலை.
"இப்ப விளங்குதே செல்லம். கிளியோ குரங்கோ என்ரை மனசில நீர்தானப்பா அடுத்வள்யாருக்கும் இடமில்லை. சும்மா எதுக்குக் கத்தி ஊரைக் கூட்டுறீர்." வார்த்தையை நான் முடிக்க முதலே.

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 7

முன்னைய பகுதிகளை படிக்க








செல்லம், செல்லம் நில்லுமப்பா என்று கொண்டு நான் வாசலுக்குப் பாய இடையிலை நின்ற மச்சான்,
ஓகோ அக்காவுக்குக் கை நீட்டுற அளவுக்குப் போட்டுதோ, இயலுமென்றால் கை வச்சுப்பாருங்கோ, அப்போ தெரியும் இந்த மச்சான் ஆரெண்டதை என்று சொல்லிக்கொண்டு பின்னால் பாய.......
ஏ து இடியோட்டன் ( ஏ மடையருகளே) என்று ஜெனி கத்தின கத்திலைதான் நாங்கள் ஒரு நிதானத்துக்கு வந்தம்.

Monday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 6


நான் லைற்றை அணைக்க,

செல்லம்மா என்னை அணைக்க,

என்ரை வாய் சும்மா கிடக்கமாட்டாமல்

செல்லம், எனக்கு அப்பவே சந்தேகமா கிடந்தது.

என்னப்பா.

Wednesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5

வேறு பல அலுவல்களிலும் கடந்த சிலநாட்களாக blog பக்கம் தலைகாட்டமுடியவில்லை அதுதான் மிகுதிக் கதையைச் சொல்லக்கொஞ்சம் தாமதமாகிவிட்டது, திட்டுவதற்குமுதல் தொடர்ந்து படியுங்கோ அதற்குப்பிறகு சொல்லவேண்டியதை சொல்லிவிட்டுப்போங்கோ. என்ன deal ok. தானே

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5

நான் வந்து ...........செல்லம்மா .......

நீங்கள் வந்திட்டியள் அது தெரியும்.

ரெபேக்கா வீட்டுக்கு போகிறேன்


அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக அவர் அப்படியேதான் இருந்தார்.

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 4

ஐயோ! இதென்ன கடவுளே நிலமெல்லாம் ஒரே ரத்தம், கட்டிலெல்லாம் தோஞ்சுபோய்கிடக்கு.

எவன் எவளைக் கொண்டானோ, நான் பாவி வசமா வந்து மாட்டுப்பட்டிட்டனே, கடைசியிலை ஒன்றையும் அனுபவிக்காமலுக்கு இப்பிடி அற்ப ஆயுசிலை ஜெயிலுக்கை போய்க் கிடக்கவேணுமே என்று பதறத்தொடங்கினன்.

Tuesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 3



தலைவிதியை நொந்துகொண்டு வேலைக்குப் போனால் ........ வாசலிலை உவள் ஜெனி ஏதோ பேருக்கு போடவேணுமெண்டதுக்காக ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு அசத்தலாய் நிண்டாள். அட இண்டைக்குப் பொழுது வெய்யிலும் வெக்கையுமாக அந்தமாதிரித்தான் விடிஞ்சிருக்கு என்று புளுகமாக் கிடந்தது, உங்களுக்கும் உவள் ஜெனியைப் பற்றிச் சொல்லுறதுக்கு நிறையக் கிடக்கு ஆனால் இப்ப இல்லை,

Monday

ஜாலியான கொள்கைகள்...................................?



காலையில எழுந்து சோம்பல்போகாதவனாக
சோபாவில் சாய்ந்தபடி ஜன்னலுக்கால தெருவில போறவாற சனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன்.
என்ன அது இன்றைக்கும் காலங்காத்தாலை சோபாவில உட்கார்ந்து காலை ஆட்டினபடி............

Saturday

அந்த அழகிய பிறந்ததினப் பரிசுகள்!

எங்கள் மகள் சௌம்யாவையும்,சாராவையும் கூட்டிக்கொண்டு பாலர் பாடசாலை போகிற நாட்களிலெல்லாம் பிஞ்சு விரலைப் பிடித்து மண்ணில் 'அ ' எழுதிய காலங்கள் என் மனத்தில் மின்னி மின்னி மறையும். அதைப் பிள்ளைகளுக்குச் சொன்னால் "அப்ப நீங்கள் படித்த Kinder garden ல் 5,6 விளையாட்டுச்சாமான் கூட இல்லையா" என்று பிள்ளைகள் அனுதாபத்துடன் என்னை ஒரு பார்வை! பிறகு அண்ணணும் தங்கையுமாக ஏதோ குசுகுசுப்பு!

Wednesday

ஒட்டகத்தோடு குடித்தனம்.


விடுமுறை நாளும் அதுவுமா பொழுதே போகாதாம்
எதாவது படிக்கலாம் என்ற எண்ணத்தில
அலுமாரியிலை இருந்த புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன்.
ஏதோ ஆளரவம் கேட்குதென்று மெல்லத் திரும்பினால்
என்னகாணும் கொஞ்சமென்றாலும் பொறுப்பில்லாமல் வாசக்கதவை ஆவென்று திறந்துவிட்டிட்டிருக்கிறீர்.

Monday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2



வளுமோ விடாமல் உங்கட ஆசையளுக்குக் குறுக்காலை நான் எப்பவாவதுநின்றிருக்கிறனே என்று கொஞ்சலாகக் கிசுகிசுத்தாள். இதுபோதுமே பிறகென்ன ஐயா வழமைபோல.........................  அதுக்கடையிலை ரெலிபோன் வேற கிணுகிணுக்கத் தொடங்கிச்சுது.ஆரடா இது சிவபூசையுக்கை கரடி பூந்த மாதிரி ஏமசாமத்திலை என்று எரிச்சலாப் போனை எடுத்தால்.

Friday

கஞ்சன்



நாட்டுநடப்புகள் தந்த மனஅழுத்தத்தில சோம்பலோட சோபாவிலை சாய்ந்திருக்க
கிணிங்ங்ங்................................ அழைப்புமணி.
சலிப்போடபோய் கதவைத்திறந்தால் வழமைபோல ஒட்டகத்தார்தான்.
நான் என்னவாக்கும் இந்த நேரத்திலை என்று யோசிக்க
ஒட்டகத்தாரே விசயத்தைச் சட்டென்று போட்டுஉடைச்சார்.

Monday

சொல்லாதே யாரும் கேட்டால் ..........



விழுந்திடிச்சு! விழுந்திடிச்சு!
செல்லம் ஏ! செல்லம்மா தண்டத்துக்கு வெட்டாதையுங்கோ! விழாது விழாது எண்டு கரிச்சுக் கொட்டினாய் இஞ்சை பார் ஐயாவுக்குப் பம்பரே விழுந்திட்டுது.
உங்கட புளுகு தெரியாதாக்கும் 10 ருபாக்கு வெட்டி 5 ருபா விழுந்தாலே ஊரைக் கூட்டுறனிங்கள்; இண்டைக்குப் 10க்கு வெட்டி 20 விழுந்திட்டுதாக்கும்.

Thursday

கொம்பியூட்டர் விற்பனைக்கு

இது கொஞ்சம் விவகாரமான விசயம்தான் 
ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன்.
என்ரை அவகொஞ்ச நாளா ‘இஞ்சாருங்கோ 
எங்களுக்கு முந்தி வந்ததுகளெல்லாம் 
சொந்தவீடு, சிட்டிசன்சிப் எண்டு ஒரு பந்தாவோட இருக்குதுகள். முந்தநாள் வந்ததுகள்கூட இன்ரநெற், ஈமெயில் எண்டு பீத்திக்கொண்டு திரியுதுகள். ஒரு சபை சந்திக்குப்போனால் எனக்குச் சொல்லுறதுக்கு ஒரு விசயம்கூட இல்லாமல் வெக்கமாக்கிடக்கப்பா, இப்படியே போனால் ஒரு சனமும் எங்களை மதியாதுகள்.

Monday

மத்தியஸ்தம் - மீண்டும் தமாசானதொரு கதை

எனக்கும் ஒட்டகத்திற்கும் இடையில்..

மீண்டும் தமாசானதொரு கதை

திட்டின கோபம் அடங்காத ஒட்டகம் என்னுடன் சேர்ந்து பேருந்தில் ஏறினாலும்கூட
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இருந்த பேருந்தில்
எனக்குப் பக்கத்தில் உட்காராமல் நான்கு ஐந்து இருக்கைள் தள்ளி உட்கார்ந்தது.
கொஞ்ச நேரத்திலை சரிவரும் என்றால்
வராதாம்.