நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday

காதல் சிட்டுக்கள் பெத்த முத்துக்கள்.




தமிழகத்து தமிழ் சிட்டுக்கள் இரண்டு சில காலங்களின் முன் எங்கள் வீட்டருகே கூடொன்றில் குடிவந்தன. தமிழகத்திலிருந்து பட்டமேற்படிப்பிற்காய் இங்கு வந்த அவர்கள். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து, திட்டமிட்டு படிப்பை முடித்து, வேலையாகி..... 
சில நாட்களின்முன் அவர்களின் கூட்டில் குடியிருக்க சின்னஞ்சிறு சிட்டொன்றும் குடிவந்துவிட்டது. அண்மையில் பிறந்த அந்த குட்டிப்பாப்பாவை பார்க்க சென்றபோது படிக்க தந்த அவர்கள் காதல் டைரியின் சில பக்கங்களை அவர்கள் அனுமதியுடன் உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

வன்னிக்காற்று வீசும் செய்தி.

 
பால் இல்லையா? பழம் இல்லையா?
பருக்கையற்ற கஞ்சியேனும் தா! எனக்
கதறிடும் மழலைகள்
மழலைகள் முகம்பார்த்து வாடிடும்
மங்கையர் இதயங்கள்.

கைதாகிக் கொலையுண்ட
காளையர் கன்னியர்
வேதனைக் கண்ணீருடன் அன்னையர் தந்தையர்

கல்வித்தடையால்
கவலையுறும் பாலகர்
மருந்துத்தடையால்
அவதியுறும் பிணியாளர்
வன்னிக் காட்டின்
இன்றைய நிகழ்வுகள்
கந்தலோ கோணியோ உடையாக
காயோ கிழங்கோ உணவாக
இலையோ வேரோ மருந்தாக
மரமோ மதிற்சுவரோ வீடாக

மரணப்படுக்கையில்
கையது கொண்டு மெய்யது பொத்தி
சுருண்டுகிடந்திடும் ஒருவர்
ஈனஸ்வரத்தில் முனகிடும்
வார்த்தைகள் சில இதோ!

"வன்னிப் பாதையில்
வந்திடும் வழிப்போக்கா
நின்றிடு சிலகணம்
மூடிவிடு என் விழியை
அடக்கம் செய் என் உடலை
விலங்கும் பறவையும்
இழுத்துப்போகுமுன்

ஆயிரம் வேட்டலில் சிறந்தது
அனாதைப் பிணத்தை அடக்கம் செய்வது
இருவரும் நாங்கள் ஈழத்தமிழரடா! 
தொப்புள் கொடிச் சொந்தமடா!"

புலம் பெயர்ந்திங்குவாழ் எம் உறவுகளே
கேட்குதோ உம் காதில் வன்னிக்காற்று
எமக்கு வீசிடும் செய்தியை
தட்டுங்கள் உங்கள் மனக் கதவுகளை
திறக்கட்டும் சிறிதேனும்.

................................................................
இந்திராணி திருநாவுக்கரசு.

Saturday

மனிதனே.....மனிதனாய் வாழ்ந்திடு......!



உடுக்கை நழுவின்
கை பார்த்திருப்பதில்லை
ஒரு கண் அழ
மறு கண் சிரிப்பதில்லை
இனம் தேடி மலர்
மணம் பரப்பவில்லை