நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday

ஹர ஹர மகா தேவ கி...

..
காலங்காத்தால இளவட்டப்பெடியனொருத்தன் ரெலிபோனெடுத்தவன் கதைச்சுக்கொண்டிருக்கேக்கை பேச்சுவாக்கில என்னடா இண்டைக்கு வேலைக்கு போகேல்லையோ என்று கேட்டத்துக்கு.
அங்கிள் இந்த கொட்டு கொட்டுற பனியுக்கை கஸ்டப்பட்டுபோய் வேலையை செய்யுறதுக்கு பரிசும் பதக்கமுமே கொடுக்கப்போறான் என்ரை முதலாளி.
அதுதான் இண்டைக்கு வேலைக்கு கட் அடிச்சிட்டு ஜாலியா பெண்டாட்டியோட உக்கார்ந்து

Friday

சினிக்கவிஞரின் இலக்கியத்திருட்டுக்கள்.


சினிமா என்பது ஒருகலா வாணிகம் என்றே சொல்ல வேண்டும்.சிறுவனை நம்பி வண்ணவண்ண மிட்டாய் வியாபாரம் செய்யும் வியாபாரிபோல், பட்டிதொட்டியெல்லாம் வாழும் பாமர ரசிகனின் ரசனையே தமிழ்ச்சினிமாவின் முக்கிய மூலதனமாகும்.
அந்த ரசிகனின் ரசனைக்கேற்ப சினிமாப் பாடல்களை சிங்காரித்துக் கொடுக்கவே பாடலாசிரியரும்,இசையமைப்பாளரும் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள். இலக்கியத் துளிகளுக்கு எளிமைவண்ணம் பூசி பாமரனின் இதயத்தில் இடம்பிடிப்பதில் கவியரசு கண்ணதாசனும் வைரமுத்துவும் கைதேர்ந்தவர்களல்லவா?
ஐயகோ! வார்த்தைகளில் இதயத்தை வருடும் கலையை இவர்கள் எங்குதான் கற்றனரோ? அழகு தமிழ் அருவியாய்க் காது வழிப்பாய்ந்து நம் இதயத்தை நனைக்கும் மாயம்தான் என்ன?
"வாளொற்றிப் புற்கென்ற கண்ணும்
அவர் சென்ற நாளொற்றி தேய்ந்தவிரல்"என்ற
வள்ளுவரின் வரிகள் புரிந்ததோ இல்லையோ
"மாலை சூடும் தேதி எண்ணிப் பத்து விரலும் தேயும்"எனும் (பாலைவனச் சோலை) கவிஞரின் தேனாய் ஒழுகும் வரிகள் நம் நெஞ்சை என்னமாய்க் கொள்ளை கொண்டது. 

Monday

அஜீத் - பாவனா சமீரா ரெட்டி நடிக்கும் "அசல்'


சிவாஜி பிலிம்சின் "அசல்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டிலேயே நடைபெறுகிறது.
பிரபு தயாரித்து அஜீத் - பாவனா சமீரா ரெட்டி நடிக்கும்