நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

களத்தில் எமது போராட்டத்திற்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்திய இலங்கை அரசு
அதையும் தாண்டி ஒன்றுபடும் புலம்பெயர் தமிழரையும் அவர்களது ஒருங்கிணக்கப்படும் அரசியல் நகர்வுகளையும் ஆரம்பத்திலேயே ஒடுக்குவதற்கும் சர்வதேச அளவில் மிகவும் பலமானதொரு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாகச் செயல்படும் விடுதலைப்புலிகளின்
சர்வதேச வலைப்பின்னல் புலம்பெயர் நாடுகளில் தாயகக்கோட்பாட்டை நோக்கிய
அரசியல் நகர்வுகளைச் செய்யவிடாது தடுக்கவும்
தனது பாரிய நரித்தனமான நடவடிக்கைகளைச் செய்யுமென்பது நிச்சயம்.
ஆதலால் நடந்தவற்றை நினைத்துக் கவலைப்படுவதில் காலவிரயம் செய்யாமல் இனிச் செய்யவேண்டியதென்ன என்பதைச் சிந்தித்துச் செயலாற்றவேண்டிய நேரமிது.
எந்த வார்த்தையைக் கேட்க எம்மனம் ஏங்குகிறதோ? ஆசைப்படுகிறதோ? அதை எவர் சொல்கிறாரோ அவர் நல்லவர். எமது மனம் ஏற்க மறுக்கும் யதார்த்தமான கருத்தை முன்வைத்தால் அவன் துரோகி. இந்த இரண்டுக்கும் அப்பால் சிந்திக்கமாட்டம். இந்த இரண்டு எல்லைகளுக்கும் அப்பால் யார் சரியான செயற்பாட்டாளன்? இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? அதை நடைமுறைப்படுத்த முயல்பவர் யார் என்பதைப் பகுத்தறிந்து செயல்படுங்கோ! சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட சமுதாயமாக இராமல் தயவு செய்து தயவு செய்து ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்படுங்கோ!
காலனித்துவகால அரசியல,;
இரண்hடாம் உலக யுத்தத்தை அண்டியகாலம்,
இதன் தொடர்ச்சியாக யுத்தத்தையொட்டித் தோன்றிய ஐநாவின் ஆரம்பகாலம்,
உலக அரசியலில் அணிசேரா அமைப்புச் செல்வாக்குச் செலுத்திய காலம,;
பனிப்போர்க் காலம்,
சோவியத்தின் சிதைவுடன் முடிந்த பனிப்போருக்குப் பிந்திய உலக அரசியல் நகர்வுகள்,
இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப்பிந்திய அரசியல்,
இன்றைய உலகமயமாக்கலுடன் இணைந்த காலம்.
இந்த ஒவ்வொருகாலகட்டத்திலும் பல உரிமைப்போராட்டங்கள் நடந்துள்ளன.
அவற்றின் வெற்றி தோல்விகள், உலக வல்லாதிக்க நாடுகள் இவை சம்பந்தமாக நடந்துகொண்டமுறைகள்..........................
.
இப்படியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு. இந்தப் பெரிய உலகத்திலை ஒருசிறு துளி இலங்கை இதிலை வாழும் ஒருசிறு துளிதான் நாங்கள்.; ஆதலால்
எமக்கு அப்பால் உள்ள இந்தப்பாரிய உலக நகர்வுகளை நாம் ஒவ்வொருவரும் சரியாக புரிந்துகொள்வது தாயகம் நோக்கிய எமது பங்களிப்பிற்கும் சாதகமான நகர்வுகளிற்கும் அவசியமானதாகும்.

No comments: