தளர்ந்து வரும் யாழ் குடா நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர்கள் மீதான யாழ்ப்பாணத்தாரின் மேலாதிக்கம்.
இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்று ஆரம்பகாலம்தொட்டே யாழ்ப்பாணத்தாரின் ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் மீதான மேலாதிக்கம் என்பது இருந்து வந்துள்ளது. இந்த மேலாதிக்கம் என்பது தமிழ் அரசியல்வாதிகளையும் தாண்டிச் சாதாரண குடாநாட்டுமக்கள் மத்தியிலும் சர்வசாதாரணமாக ஆழப்பதிந்திருக்கிறது. தோட்டக்காட்டான், வடக்கத்தையான், மட்டக்களப்பான், வன்னியான் போன்ற ஏளனமான சொற்பதங்கள் மூலம் தமது மேலாதிக்கத்தைக் கூறிக்கொள்வதில் குடாநாட்டாருக்கு ஒரு அலாதிப்பிரியம்.