நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

யாழ்பாணிய மேலாதிக்க அரசியலால் இழந்ததுபோதும்.

தளர்ந்து வரும் யாழ் குடா நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர்கள் மீதான யாழ்ப்பாணத்தாரின் மேலாதிக்கம்.

இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்று ஆரம்பகாலம்தொட்டே யாழ்ப்பாணத்தாரின் ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் மீதான மேலாதிக்கம் என்பது இருந்து வந்துள்ளது. இந்த மேலாதிக்கம் என்பது தமிழ் அரசியல்வாதிகளையும் தாண்டிச் சாதாரண குடாநாட்டுமக்கள் மத்தியிலும் சர்வசாதாரணமாக ஆழப்பதிந்திருக்கிறது. தோட்டக்காட்டான், வடக்கத்தையான், மட்டக்களப்பான், வன்னியான் போன்ற ஏளனமான சொற்பதங்கள் மூலம் தமது மேலாதிக்கத்தைக் கூறிக்கொள்வதில் குடாநாட்டாருக்கு ஒரு அலாதிப்பிரியம்.

Monday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 6


நான் லைற்றை அணைக்க,

செல்லம்மா என்னை அணைக்க,

என்ரை வாய் சும்மா கிடக்கமாட்டாமல்

செல்லம், எனக்கு அப்பவே சந்தேகமா கிடந்தது.

என்னப்பா.

Friday

வாழ்க கூகிள். ஜாலிதான் நான் கடலைபோடுற குட்டியளின்ரை விபரமெல்லாம்.........



இஞ்சருங்கோ சொல்ல மறந்துபோனன் புறோக்கர் தொலைபேசினவரப்பா,

உவள் எங்கட மூத்தவளுக்குப் பேசின மாப்பிளைவீடடுக்காரர் ஊரில வடிவா விசாரிக்கவேணுமென்று உங்கட பேரன் பேத்தியின்ரை பெயர் ஊர் மற்ற விபரமெல்லாம் கேட்கினமாம்.

என்னது ஊரிலை விசாரிக்க வேணுமாமோ?

ஓமப்பா பொன்னர், அம்பலத்தார் என்று உங்கட பெயரைப்ப் பார்க்க நாங்கள் தங்கட சாதி ஆக்களில்லையோ என்று யோசிக்கினமாம்

Wednesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5

வேறு பல அலுவல்களிலும் கடந்த சிலநாட்களாக blog பக்கம் தலைகாட்டமுடியவில்லை அதுதான் மிகுதிக் கதையைச் சொல்லக்கொஞ்சம் தாமதமாகிவிட்டது, திட்டுவதற்குமுதல் தொடர்ந்து படியுங்கோ அதற்குப்பிறகு சொல்லவேண்டியதை சொல்லிவிட்டுப்போங்கோ. என்ன deal ok. தானே

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5

நான் வந்து ...........செல்லம்மா .......

நீங்கள் வந்திட்டியள் அது தெரியும்.

Thursday

நான் போகாத சாமத்தியச்சடங்கு

இன்றைக்குப்போல கிடக்கு எழுபதுகளின் ஆரம்பத்திலை கொழும்பு ரொறிங்ரன் அரசாங்க தொடர்மாடிக் குடியிருப்புக்களில் வாழ்ந்த காலம். எத்தனையோ நாடுகளிலை அடுக்குமாடிக் குடியிருப்புக்களைப் பாத்திருக்கிறன் ஆனால் இந்தமாதிரி ஒரு அமைப்பை நான் பாத்ததே இல்லை. சுற்றிவர வீடுகள் நடுவிலை ஒரு மைதானம் அத்தனை வீடுகளின்ரை பல்க்கனியிலை நின்றும் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கலாம்.
சாயங்காலமானால் மைதானம் களைகட்டும். கிரிக்கற், உதைபந்தாட்டம் வொலிபோல். சின்னவயசுக்காரர், விடலையள், பெரியவை என பல குழுக்களாக மைதானம் நிறையும். இதைவிட அங்கங்கை சிறுசிறு கொத்துக்களாக இளவட்டப் பெண்கள் கூட்டம். மைதானத்தின் ஓரமா இருந்த கிளப்பிலை பெரிசுகளின்ரை சீட்டாட்டம், பியர் அடி என ஒரே கலகலப்பா இருக்கும்.

Wednesday

ரெபேக்கா வீட்டுக்கு போகிறேன்


அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக அவர் அப்படியேதான் இருந்தார்.

Monday

காலம் செய்த கோலம்.



அமைதியாப் போய்க்கொண்டிருந்த காலத்திலை ஒரு புயல். ஜே.வி.பி. இன் அரசுக்கெதிரான புரட்சி. இதன் அரங்கேற்றகாலத்தில் கலகெதற எனும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் கிராமத்தில் மாட்டிக்கொண்டன்.

Saturday

மனிதனே.....மனிதனாய் வாழ்ந்திடு......!



உடுக்கை நழுவின்
கை பார்த்திருப்பதில்லை
ஒரு கண் அழ
மறு கண் சிரிப்பதில்லை
இனம் தேடி மலர்
மணம் பரப்பவில்லை

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 4

ஐயோ! இதென்ன கடவுளே நிலமெல்லாம் ஒரே ரத்தம், கட்டிலெல்லாம் தோஞ்சுபோய்கிடக்கு.

எவன் எவளைக் கொண்டானோ, நான் பாவி வசமா வந்து மாட்டுப்பட்டிட்டனே, கடைசியிலை ஒன்றையும் அனுபவிக்காமலுக்கு இப்பிடி அற்ப ஆயுசிலை ஜெயிலுக்கை போய்க் கிடக்கவேணுமே என்று பதறத்தொடங்கினன்.

Thursday

இலக்கை நோக்கிய பயணம்


எங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கிய

அந்தக் கொடிய வைகாசி 17......

பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும்,

எமது கனவு,

எமது இலட்சியம்

எமது ஏக்கம்,

எமது கொள்கை,

எமது அமைப்பு,