நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

கனவுகள் காணலாம் ஆனால் பகற்கனவுகள் காண்பதில் அரத்தமில்லை.
இன்றைய உலக அரசியல் முறைமையில் வல்லரசுகள் அல்லது
வல்லரசுப் பட்டியலில் இடம்பிடிக்கத் துடிக்கும் நாடுகள் தம்மிடையே
ஒருபோதும் நேரடியாக மோதிக்கொள்ளாது அப்படி மோதிக்கொள்ள ஏனைய
வல்லரசுகளின் அரசியல்நகர்வுகள் இடம்கொடாது. ஆனால் வல்லரசுகள்
தமது பலம் பலவீனம் என்பவற்றை வேறுவழிகளில் உரசிப்பார்த்து அறிந்துகொள்ளும்.
எங்கள் பிரச்சனையையும் அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகளுக்கெதிரான
தங்கள் பலத்தை தமது எதிர்ப்பின் வீரியத்தை உரசிப்பார்க்கும் ஒருகளமாகவே
சீனாவும், இந்தியாவும் பயன்படுத்தியிருந்தன. இதில் மேற்குலகைவிட
லோக்கல் சண்டியர்களின் கை ஒங்கி இருப்பதையே இலங்கைவிடயத்தில்
எதுவும் செய்யமுடியாமலும் அதை வெளியே காட்டிக்கொள்ளவும் முடியாமலும்
கைபிசைந்து நிற்கும் மேற்குலகின் நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.

No comments: