நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

ஆண்களின் உலகத்தில் பெண்கள்


மீண்டும் ஒருதடவை உங்களுடன் பேசாப்பொருட்களை பேச முனைகிறேன். இங்கும் முன்புபோல உங்கள் ஆணித்தரமன கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிபார்த்திருக்கிறேன்.

Monday

ஓரினச்சேர்க்கை எனும் ஓரினக்காதலும் நானும்


இன்று நான் சர்ச்சைக்கு உரிய ஒரு விடயத்தை கையில் எடுத்திருக்கிறேன். இதில் குறிப்பிட்ட சம்பவங்கள் உண்மையான போதிலும் பெயர்களையும் சம்பவ களங்களையும் மாற்றியே குறிப்பிட்டுள்ளேன். சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடுவதைவிட்டு சம்பவங்களிற்கான காரணங்களை ஆய்வு செய்யுங்கள். பரந்த அறிவும் பக்குவமான மனதுமுடைய உங்களிடமிருந்து யாருடைய மனங்களையும் நோகடிக்காத கௌரவமான வார்த்தை, கருத்துப் பிரயோகங்களை எதிர்பார்க்கிறேன்.

Wednesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8




முன்னைய பகுதிகளை படிக்க 

சொல்லாதே யாரும் கேட்டால்...........7 



சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8

"உங்கட சண்டைகளாலை கடைசியிலை என்ரை நாயைக் கொன்றுபோட்டியளே!" என்று ஜெனி கத்தவும்தான் விளங்கியது, உவள் பாவி இவ்வளவு நேரமாக நாய் செத்த கவலையிலைதான் அழுதிருக்கிறாள் என்று. கடவுளே இப்பவாவது புரிஞ்சுதே. இனி மனிசியை வழிக்குக் கொண்டுவாற வழியைப் பார்ப்பம் என்ற எண்ணத்திலை.
"இப்ப விளங்குதே செல்லம். கிளியோ குரங்கோ என்ரை மனசில நீர்தானப்பா அடுத்வள்யாருக்கும் இடமில்லை. சும்மா எதுக்குக் கத்தி ஊரைக் கூட்டுறீர்." வார்த்தையை நான் முடிக்க முதலே.