நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் ஏன் எதனால் எப்படி பேசாப்பொருள்பற்றி பேசுவோம்.

யாழில் அண்மைக்காலமாக விபச்சாரம் கோலோச்சுவதாக பத்திரிகைகளும் இணையத்தளங்களும் செய்தி வெளியிடுகின்றன.

உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த தொழில்களில் ஒன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் தொழில். எமது இலங்கை இந்தியாபோன்ற நாடுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் 99% பாலியல் தொழில் என்றாலே பெண்களால் ஆண்களின் பாலியல் தேவைகளை நிவர்த்திசெய்ய நடத்தப்படுவதாகவே உள்ளது. ஆனால் மேற்குலகை பொறுத்தவரையில் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய ஆண்களும் பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிறது.

Friday

பயோடேட்டா புலம்பெயர் தமிழர்கள்





பெயர்                                  :புலம்பெயர்தமிழர்கள்
இயற்பெயர்                       :இலங்கைத்தமிழர்
நிரந்தர தலைவர்             :வேலுப்பிள்ளை பிரபாகரன்
துணைத் தலைவர்கள்    :உருத்திரகுமார், நெடியவன்
இணைத் தலைவர்கள்    :வை.கோ, சீமான் போன்ற தமிழக தலைவர்கள்
வயது                                   : ஓய்வு எடுக்கும் வயது

Wednesday

எச்சரிக்கை இந்துசமுத்திர பிரதேசத்தில். பெரிய நில அதிர்வு (8.9) - சுனாமி வாய்ப்புள்ளது.

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு முக்கிய தகவல் ஆசிய பிராந்தியத்தில் ஒரு நில நடுக்கத்துடன் கூடிய சுனாமி வருவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாயகத்தில் கடற்கரை பிரதேசங்களில் வசிக்கும் எம்மவர்கள் அவதானமாக இருக்கவும்.
மேலதிக தகவல்களிற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக்பண்ணிப்பார்க்கவும்.


சற்றுமுன் பெரிய நில அதிர்வு (8.9) - சுனாமி வாய்ப்புள்ளது.

Magnitude 8.6 - OFF THE WEST COAST OF NORTHERN SUMATRA 2012 April 11 08:38:37 UTC.

Tuesday

இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது 2..களம் காணாமலே கைதான JVP தலைவர்

 1971 மார்ச் மாதம். தெலுந்தனியாவில் உள்ள மறைவிடம் ஒன்று.
 தோழர்களே நான் தலைவர் றோகணவை சந்திக்க அம்பாந்தோட்டை செல்கிறேன். நான் வரும்வரை தோழர் சகோதரி பிரேமாவதி இந்த முகாமிற்கு பொறுப்பாக இருப்பார் அவர் கூறும் கட்டளைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கிளர்ச்சிக்குரிய நாள் குறிக்கப்பட்டுவிட்டது. உங்களால் முடிந்தவரை அதிகளவான வெடிபொருட்களை தயார் செய்யுங்கள். மேலதிக விபரங்களை பிரேமாவதியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். 

தலைவர் வாழ்க சேயின் பாதையில் புரட்சி ஓங்குக.