நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday

எல்லை காக்கும் தெய்வங்கள்


எம் தாயகமெங்கும் எமது இருப்பே கெள்விக்குறியாக்கப்பட்டுவரும் இன்றையகாலத்தில்

Monday

நட்பு & புரிந்துணர்வு





விடுதலைப்போராட்டங்களை உரிமைப்போராட்டங்களை ஆதரிக்கும் எந்த ஒரு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை வளர்த்துக்கொள்ளாதது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்றாவது சிங்களதேசத்திற்கு எதிரான நாடுகளுடன்

மாணவர் போராட்டக்களத்தில் ஜெயா அம்மாவினது காய்நகர்த்தல்



கலைஞர் இந்த மாணவர் போராட்டத்தை கையிலெடுத்து ஆப்பு இழுத்த குரங்காக வேண்டும். மாணவர்கள் போராட்டட்த்தை சற்றே விஸ்வரூபம் எடுக்கவைத்து அதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.

Saturday

இலங்கையில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் இனவாத அரசியல் சக்திகள்.



தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி முடக்கிவிட்டோம். விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டாயிற்று.
ஆனால் இன்னமும் சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. ஆயினும் அரசுக்கு இதற்கெல்லாம் காரணம் புலிப்பயங்கரவாதமே என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாத நிலை.
அடுத்தது என்ன?

Thursday

ஈழத்தில் இந்திய அமைதிப் படை செய்த கொடுமைகளும் ஜெயமோகனின் அரைவேக்காட்டுப் பிசத்தல்களும்


அண்மையில் ஜெயமோகன் எழுதிய இரு பதிவுகள் என்னை இதை எழுதத்தூண்டியது. முதலாவது பதிவு இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை மனித நேய சேவைகளே செய்தது என்ற கருத்தை விதைக்க எழுதப்பட்டது. இதற்கு சாட்சியாக ஜெயமோகன் அமைதிகாக்கும் படையில் இருந்த சிப்பாய்களின் கூற்றையே ஆதாரமாக வைக்கிறார்.

Tuesday

இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது 2..களம் காணாமலே கைதான JVP தலைவர்

 1971 மார்ச் மாதம். தெலுந்தனியாவில் உள்ள மறைவிடம் ஒன்று.
 தோழர்களே நான் தலைவர் றோகணவை சந்திக்க அம்பாந்தோட்டை செல்கிறேன். நான் வரும்வரை தோழர் சகோதரி பிரேமாவதி இந்த முகாமிற்கு பொறுப்பாக இருப்பார் அவர் கூறும் கட்டளைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கிளர்ச்சிக்குரிய நாள் குறிக்கப்பட்டுவிட்டது. உங்களால் முடிந்தவரை அதிகளவான வெடிபொருட்களை தயார் செய்யுங்கள். மேலதிக விபரங்களை பிரேமாவதியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். 

தலைவர் வாழ்க சேயின் பாதையில் புரட்சி ஓங்குக.

இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது



எனது இளம்பிராயத்தில் நான் கல்விகற்றது கொழும்பு றோயல் கல்லூரி எனும் மூவின மக்களும் கல்வி கற்கும் பிரபல பாடசாலையில், வசித்தது மூவினமக்களும் கலந்து குடியிருந்த கொழும்பின் புறநகர்ப்பகுதி. 

எனது வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளிக் குடியிருந்தவ சாந்தா. அவ காலையில் மடிப்பு கலையாத ஸ்கூல் யூனிபாரமும், அழகாக முகத்திற்கு பவுடர் பூசி, நெற்றியில சின்னதா ஒரு திருநீற்று குறி, நடுவில ஒரு குட்டி ஸ்டிக்கர்பொட்டு என அம்சமா வாசற்கதவை திறந்துகொண்டு தெருவில் இறங்கும்வரை காத்திருந்து நானும் புறப்படுவன்.  

Sunday

சிங்கிளாய் வந்த முதுபெரும் சிங்கம்.



கணனியின் பழைய கோப்புக்களில் ஏதோ தேவைக்காய் தேடிக்கொண்டிருந்தபோது ஏறக்குறைய எட்டு, ஒன்பது வருடங்களின்முன் தமிழின் முதுபெரும் சிங்கமொன்று ஜேர்மனி வந்திருந்தபோது அவரை சந்தித்ததுபற்றி அன்று நான் எழுதிய குறிப்பொன்று கண்ணில் பட்டது அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Wednesday

அல்கைத்தாவுடன் கைகோர்க்க தயாராகும் அமெரிக்கா.



தனது நலன்களுக்காக அமெரிக்கா எதையும் செய்யும் என்பதற்கு இப்பொழுது சிரியாவில் இடம்பெறும் நிகழ்வுகளும் மற்றும் ஒரு உதாரணம். சிரிய அரசுக்கு எதிராக அண்மையில் இடம்பெற்றுவரும் கிளர்ச்சிக்கு அல்கைத்தா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவும் சிரிய கிளர்ச்சிக்காரர்களை ஆதரிக்கிறது.

Saturday

ஆகா கிடைச்சிடிச்சு.





களுகங்கையில் குளிக்கிற சுதுநோனா நயினாதீவு நாகவிகாரை செல்ல சுதந்திரம்

காலி பஸ்நிலையத்தில் பிச்சை எடுக்கும் புஞ்சிமண்டா யாழ்ப்பாண பஸ்நிலையத்திலும் பிச்சை எடுக்க சுந்திரம்.

கொழும்பு காமினி தெமிழ படு காண்ட யாப்பண யண்ட (காமினிக்கு தமிழ்
சரக்கடிக்க யாழ். செல்ல) சுதந்திரம்

மட்டக்களப்பு மரிக்கார் மருதனாமடச் சந்தியிலை கடை வைக்க சுதந்திரம்

Friday

எழுத்தாயுதம் ஏந்தியவன்



தராக்கி வித்தாகி விதையான செய்தியை இன்னமும் நம்ப மறுக்கிறது மனசு. ஆணித்தரமான அந்த எழுத்துக்கள், ஆய்வுகள் மனதில் படமாய் ஓட அந்த மாமனிதனின் என் மனப்பதிவுகளை அசைபோட்டதில்.................

Thursday

இன்றைய இலங்கையில் சாத்தியமான போராட்டம்

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை ஆட்சி செய்த எந்த ஒரு அரசுமே தமிழர்களிற்குரிய உரிமைகளைப் பகிர்ந்துகொள்வதில் இதயசுத்தியுடன் நடந்துகொள்ளவில்லை. அதுமட்டுமன்றி தமிழ், சிங்களம், இஸ்லாமிய , மலையகதமிழர் என அனைத்துத் தரப்பிலும் உள்ள நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ முற்படவில்லை.

Tuesday

மாற்றங்களைத் தேடி....

வடக்கின் வசந்தம்
கிழக்கின் உதயம்
என்றெல்லாம் சிங்கள அரசு பெரிதாக பிலிம்
காட்டும்.
ஆனால் அப்பாவித் தமிழனுக்கு வாய்கரிசியும் கிடைக்காது.
பாவம் சதாரண சிங்களவன். அவனுக்கு அரசாங்கம்

Thursday

யாழ்பாணிய மேலாதிக்க அரசியலால் இழந்ததுபோதும்.

தளர்ந்து வரும் யாழ் குடா நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர்கள் மீதான யாழ்ப்பாணத்தாரின் மேலாதிக்கம்.

இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்று ஆரம்பகாலம்தொட்டே யாழ்ப்பாணத்தாரின் ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் மீதான மேலாதிக்கம் என்பது இருந்து வந்துள்ளது. இந்த மேலாதிக்கம் என்பது தமிழ் அரசியல்வாதிகளையும் தாண்டிச் சாதாரண குடாநாட்டுமக்கள் மத்தியிலும் சர்வசாதாரணமாக ஆழப்பதிந்திருக்கிறது. தோட்டக்காட்டான், வடக்கத்தையான், மட்டக்களப்பான், வன்னியான் போன்ற ஏளனமான சொற்பதங்கள் மூலம் தமது மேலாதிக்கத்தைக் கூறிக்கொள்வதில் குடாநாட்டாருக்கு ஒரு அலாதிப்பிரியம்.

இலக்கை நோக்கிய பயணம்


எங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கிய

அந்தக் கொடிய வைகாசி 17......

பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும்,

எமது கனவு,

எமது இலட்சியம்

எமது ஏக்கம்,

எமது கொள்கை,

எமது அமைப்பு,

Saturday

பழிக்குப் பழி கொலைக்குக் கொலை

 ஒரு ராஜீவ்காந்தியைக் கொன்றதற்கு மூவரிற்கு மரணதண்டனையென்றால் 
பல ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்ல அனுமதிகொடுத்த ராஜீவ்காந்திக்கு ஒரு மரணதண்டனை கொஞ்சம் கம்மிதான். 
சரி அவர்தான் ஏற்கெனவே போய்விட்டார் விட்டுவிடுவம். 

Wednesday

மாறிவரும் மேற்கத்தைய உழைக்கும் மக்களின் மனநிலை.


மேற்கத்தைய நாடுகளில் வாழும் சாதாரண மக்கள் அதிகமாக உழைத்து முன்னேறுவதற்கும் தங்கள் பொருளாதாரநிலையை உயர்த்திக்கொள்வதற்கும் உரிய வாய்ப்புக்கள் அண்மைக்காலங்களில் மிகவும் அரிதாகிக்கொண்டுவருகிறது. உலகமயமாக்கல் 

Saturday

மீண்டும் எட்டப்படும் புதிய சமநிலைகள்

 கடுமையான அடக்குமுறை மற்றும் இராணுவத்தின் அளவிற்குமீறிய பிரசன்னமும் தலையீடுகளும், ஒட்டுக்குழுக்களின் அராஜகம் எனப் பலதும்  நிறைந்துள்ள ஓரிடத்தில் ஆளும் அரச கூட்டணிக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடபகுதியில் ஈட்டியுள்ள வெற்றி, எல்லாவற்றுக்கும் மேலாகத் தெரிவிக்கும் கருத்து,