நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்
வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Sunday
Tuesday
Monday
மாணவர் போராட்டக்களத்தில் ஜெயா அம்மாவினது காய்நகர்த்தல்
கலைஞர் இந்த மாணவர் போராட்டத்தை கையிலெடுத்து ஆப்பு இழுத்த குரங்காக வேண்டும். மாணவர்கள் போராட்டட்த்தை சற்றே விஸ்வரூபம் எடுக்கவைத்து அதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.
Saturday
இலங்கையில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் இனவாத அரசியல் சக்திகள்.
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி முடக்கிவிட்டோம். விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டாயிற்று.
ஆனால் இன்னமும் சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. ஆயினும் அரசுக்கு இதற்கெல்லாம் காரணம் புலிப்பயங்கரவாதமே என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாத நிலை.
அடுத்தது என்ன?
Tuesday
Thursday
ஈழத்தில் இந்திய அமைதிப் படை செய்த கொடுமைகளும் ஜெயமோகனின் அரைவேக்காட்டுப் பிசத்தல்களும்

அண்மையில் ஜெயமோகன் எழுதிய இரு பதிவுகள் என்னை இதை எழுதத்தூண்டியது. முதலாவது பதிவு இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை மனித நேய சேவைகளே செய்தது என்ற கருத்தை விதைக்க எழுதப்பட்டது. இதற்கு சாட்சியாக ஜெயமோகன் அமைதிகாக்கும் படையில் இருந்த சிப்பாய்களின் கூற்றையே ஆதாரமாக வைக்கிறார்.
Tuesday
இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது 2..களம் காணாமலே கைதான JVP தலைவர்
1971 மார்ச் மாதம். தெலுந்தனியாவில் உள்ள மறைவிடம் ஒன்று.
தோழர்களே நான் தலைவர் றோகணவை சந்திக்க அம்பாந்தோட்டை செல்கிறேன். நான் வரும்வரை தோழர் சகோதரி பிரேமாவதி இந்த முகாமிற்கு பொறுப்பாக இருப்பார் அவர் கூறும் கட்டளைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கிளர்ச்சிக்குரிய நாள் குறிக்கப்பட்டுவிட்டது. உங்களால் முடிந்தவரை அதிகளவான வெடிபொருட்களை தயார் செய்யுங்கள். மேலதிக விபரங்களை பிரேமாவதியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
தலைவர் வாழ்க சேயின் பாதையில் புரட்சி ஓங்குக.
தோழர்களே நான் தலைவர் றோகணவை சந்திக்க அம்பாந்தோட்டை செல்கிறேன். நான் வரும்வரை தோழர் சகோதரி பிரேமாவதி இந்த முகாமிற்கு பொறுப்பாக இருப்பார் அவர் கூறும் கட்டளைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கிளர்ச்சிக்குரிய நாள் குறிக்கப்பட்டுவிட்டது. உங்களால் முடிந்தவரை அதிகளவான வெடிபொருட்களை தயார் செய்யுங்கள். மேலதிக விபரங்களை பிரேமாவதியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். தலைவர் வாழ்க சேயின் பாதையில் புரட்சி ஓங்குக.
இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது
எனது இளம்பிராயத்தில் நான் கல்விகற்றது கொழும்பு றோயல் கல்லூரி எனும் மூவின மக்களும் கல்வி கற்கும் பிரபல பாடசாலையில், வசித்தது மூவினமக்களும் கலந்து குடியிருந்த கொழும்பின் புறநகர்ப்பகுதி.
எனது வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளிக் குடியிருந்தவ சாந்தா. அவ காலையில் மடிப்பு கலையாத ஸ்கூல் யூனிபாரமும், அழகாக முகத்திற்கு பவுடர் பூசி, நெற்றியில சின்னதா ஒரு திருநீற்று குறி, நடுவில ஒரு குட்டி ஸ்டிக்கர்பொட்டு என அம்சமா வாசற்கதவை திறந்துகொண்டு தெருவில் இறங்கும்வரை காத்திருந்து நானும் புறப்படுவன்.
Saturday
ஆகா கிடைச்சிடிச்சு.
களுகங்கையில் குளிக்கிற சுதுநோனா நயினாதீவு நாகவிகாரை செல்ல சுதந்திரம்காலி பஸ்நிலையத்தில் பிச்சை எடுக்கும் புஞ்சிமண்டா யாழ்ப்பாண பஸ்நிலையத்திலும் பிச்சை எடுக்க சுந்திரம்.
கொழும்பு காமினி தெமிழ படு காண்ட யாப்பண யண்ட (காமினிக்கு தமிழ்
சரக்கடிக்க யாழ். செல்ல) சுதந்திரம்
மட்டக்களப்பு மரிக்கார் மருதனாமடச் சந்தியிலை கடை வைக்க சுதந்திரம்
Friday
Thursday
இன்றைய இலங்கையில் சாத்தியமான போராட்டம்
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை ஆட்சி செய்த எந்த ஒரு அரசுமே
தமிழர்களிற்குரிய உரிமைகளைப் பகிர்ந்துகொள்வதில் இதயசுத்தியுடன்
நடந்துகொள்ளவில்லை. அதுமட்டுமன்றி தமிழ், சிங்களம், இஸ்லாமிய , மலையகதமிழர்
என அனைத்துத் தரப்பிலும் உள்ள நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ்
உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ அவர்களின் உரிமைகளைப்
பாதுகாக்கவோ முற்படவில்லை.
Tuesday
Thursday
யாழ்பாணிய மேலாதிக்க அரசியலால் இழந்ததுபோதும்.
தளர்ந்து வரும் யாழ் குடா நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர்கள் மீதான யாழ்ப்பாணத்தாரின் மேலாதிக்கம்.
இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்று ஆரம்பகாலம்தொட்டே யாழ்ப்பாணத்தாரின் ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் மீதான மேலாதிக்கம் என்பது இருந்து வந்துள்ளது. இந்த மேலாதிக்கம் என்பது தமிழ் அரசியல்வாதிகளையும் தாண்டிச் சாதாரண குடாநாட்டுமக்கள் மத்தியிலும் சர்வசாதாரணமாக ஆழப்பதிந்திருக்கிறது. தோட்டக்காட்டான், வடக்கத்தையான், மட்டக்களப்பான், வன்னியான் போன்ற ஏளனமான சொற்பதங்கள் மூலம் தமது மேலாதிக்கத்தைக் கூறிக்கொள்வதில் குடாநாட்டாருக்கு ஒரு அலாதிப்பிரியம்.
Saturday
பழிக்குப் பழி கொலைக்குக் கொலை
ஒரு ராஜீவ்காந்தியைக் கொன்றதற்கு மூவரிற்கு மரணதண்டனையென்றால்
பல ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்ல அனுமதிகொடுத்த ராஜீவ்காந்திக்கு ஒரு மரணதண்டனை கொஞ்சம் கம்மிதான்.
சரி அவர்தான் ஏற்கெனவே போய்விட்டார் விட்டுவிடுவம்.
Saturday
Subscribe to:
Posts (Atom)







