நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

வெறுமனே எதிர்கருத்துக்கள்வைப்புது மட்டுமே சிறந்ததாக அமையாது அந்தவகையில் அடுத்த நடவடிக்கைளுக்கான தேடுதல்கள் மிக அவசியமானது.
இந்தவகையில் முதலில் நாம் செய்யவேண்டிய முக்கிய பணி புலம்டிபயர் இளையோரின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதில் எம்மில் சிலர் குளிர்காயள நினைப்பதுடன், அவர்களது தாயம் நோக்கிய செயற்பாடுகளைத் திசைதிருப்பிவிடுவதைத் தடுக்கவேண்டும்.
வீடுபுகுந்து அசிட் அடிக்கும் அளவிற்கு அவர்களை சிந்திக்கமுடியாத
வெறும் இனவெறி ஊட்டப்பட்டவர்களாக மாற்றவேண்டாம்.
புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் இம்மாதிரியான நிகழ்வுகள்
எமக்குச் சாதகமாக அல்லாது, எதிரிக்குச் சாதகமான விளைவுகளையே தரும்.
83 ஆண்டுக்கலவர காலத்தில் பாரிஸ் நகரில்
சிங்கள இளைஞருக்கு எதிராக கத்திக்குத்துப் போன்ற வன்முறைகளில்
ஈடுபட்டதன் எதிர்விளைவுகளை அன்று இளைஞனாக இருந்து நேரில் கண்ட
அனுபவத்தில் சொல்கிறேன் புலத்தில் வன்முறைப்போராட்டம் எமக்குப் பாதகமானது.
தமிழரசுக்கட்சி அதன் பின் வந்த அனைத்துப் போராளி அமைப்பக்கள்
என யாவும் இளைஞர்களை தெளிந்த அரசியல் சிந்தனையும்
தீர்க்கதரிசனமும் கொண்டவர்களாக, போராளிகளாக உருவாக்காமல்,
இன உணர்வுகளைத் தூண்டி
தமது இலக்கு நோக்கிய தெளிவான பார்வையற்ற
வெறும் இன உணர்வுமட்டுமே ஊட்டப்பட்டு
வளர்த்ததுவும் எமது பாரிய பின்னடைவிற்கும். அதன்பின் இன்று ஏற்பட்டுள்ள
அரசியல் வெற்றிடத்திற்கும் எம்மை வழிநடத்த
அடுத்தகட்டத் தலைமைத்துவத் தகுதியுடையவர்கள்
இல்லாதுபோனதற்கும் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது
இளைஞர்கள் எமது சிந்தனைகளிலிருந்துமாறுபட்ட கோணங்களில் சிந்திக்கிறார்கள்.
மாறிவரும் உலகியல் முறைமைகளுக்கும் இன்றைய
புறச்சுhழல்களிற்கும் ஏற்ப நவீன போராட்டவடிவங்களை முன் எடுக்கமுனைகிறார்கள்.
உதாரணமாக ஜனனி ஜனநாயகம் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்குப் போட்டியிட்டதன் மூலம்
லண்டனில் எமது வாக்கு வங்கியன் பலம் ஐம்பதாயிரத்திற்கு மேல் என எடுத்துக்கட்டடியது
வாக்கு வங்கியை நம்பி அரசியல் நடத்தும் இங்கிலாந்து அரசியல் கட்சிகளிற்கு
எம்மை நோக்கிய பார்வையை இந்தநடவடிக்கை திருப்பியிருக்கும்.
தயவுசெய்து இளையோரை அவர்கள்பாணியில் புலம்பெயர் சுhழலிற்கேற்ப அவர்கள் போராட்டங்களைத் தொடரவிடுங்கள்.

No comments: