நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்
வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Tuesday
Friday
நாங்களும் எங்கட விலாசங்களும் படுகிறபாடு.
எங்களது ஆட்கள் எதாவது ஒரு நிகழ்வு நடைபெறும் மண்டபம் ஒரு வீடு ஒரு கடை என எந்த ஒரு இடத்தின் முகவரியை சொல்லுறதென்றாலும் ரொம்பவும் விபரமாக சொல்லிடுவாங்க.
என்ன ஒரு சோகமென்றால் அவங்க சொல்லுறபடி அந்த இடத்தை தேடிப்பிடித்து போகிற வல்லமை எனக்கில்லை. இப்படி நான் விலாசம் தேடின கதையளை உங்களுக்கெல்லாம் சொல்லி ஒருவாட்டி ஓவென்று அழுதால்தான் என்ரை மனசு ஆறும்.
Tuesday
Saturday
ஓலைக்குடிசை
தமிழாலய பாடசாலை பொங்கல்விழாவில் மாணவர்கள்
கார்த்திகா, சுகன்யா, சௌம்யா, அஜந்தா, தினேஸ், சிந்துஜன் ஆகியோருடன் நானும் நடிச்சது இந்த நாடகம்
Thursday
ஈழத்தில் இந்திய அமைதிப் படை செய்த கொடுமைகளும் ஜெயமோகனின் அரைவேக்காட்டுப் பிசத்தல்களும்
அண்மையில் ஜெயமோகன் எழுதிய இரு பதிவுகள் என்னை இதை எழுதத்தூண்டியது. முதலாவது பதிவு இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை மனித நேய சேவைகளே செய்தது என்ற கருத்தை விதைக்க எழுதப்பட்டது. இதற்கு சாட்சியாக ஜெயமோகன் அமைதிகாக்கும் படையில் இருந்த சிப்பாய்களின் கூற்றையே ஆதாரமாக வைக்கிறார்.
Tuesday
யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் ஏன் எதனால் எப்படி பேசாப்பொருள்பற்றி பேசுவோம்.
யாழில் அண்மைக்காலமாக விபச்சாரம் கோலோச்சுவதாக பத்திரிகைகளும் இணையத்தளங்களும் செய்தி வெளியிடுகின்றன.
உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த தொழில்களில் ஒன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் தொழில். எமது இலங்கை இந்தியாபோன்ற நாடுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் 99% பாலியல் தொழில் என்றாலே பெண்களால் ஆண்களின் பாலியல் தேவைகளை நிவர்த்திசெய்ய நடத்தப்படுவதாகவே உள்ளது. ஆனால் மேற்குலகை பொறுத்தவரையில் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய ஆண்களும் பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிறது.
உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த தொழில்களில் ஒன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் தொழில். எமது இலங்கை இந்தியாபோன்ற நாடுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் 99% பாலியல் தொழில் என்றாலே பெண்களால் ஆண்களின் பாலியல் தேவைகளை நிவர்த்திசெய்ய நடத்தப்படுவதாகவே உள்ளது. ஆனால் மேற்குலகை பொறுத்தவரையில் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய ஆண்களும் பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிறது.
Wednesday
எச்சரிக்கை இந்துசமுத்திர பிரதேசத்தில். பெரிய நில அதிர்வு (8.9) - சுனாமி வாய்ப்புள்ளது.
அனைத்து நண்பர்களுக்கும் ஒரு முக்கிய தகவல் ஆசிய பிராந்தியத்தில் ஒரு நில நடுக்கத்துடன் கூடிய சுனாமி வருவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாயகத்தில் கடற்கரை பிரதேசங்களில் வசிக்கும் எம்மவர்கள் அவதானமாக இருக்கவும்.
மேலதிக தகவல்களிற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக்பண்ணிப்பார்க்கவும்.
சற்றுமுன் பெரிய நில அதிர்வு (8.9) - சுனாமி வாய்ப்புள்ளது.
Magnitude 8.6 - OFF THE WEST COAST OF NORTHERN SUMATRA 2012 April 11 08:38:37 UTC.
மேலதிக தகவல்களிற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக்பண்ணிப்பார்க்கவும்.
சற்றுமுன் பெரிய நில அதிர்வு (8.9) - சுனாமி வாய்ப்புள்ளது.
Magnitude 8.6 - OFF THE WEST COAST OF NORTHERN SUMATRA 2012 April 11 08:38:37 UTC.
Tuesday
இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது 2..களம் காணாமலே கைதான JVP தலைவர்
1971 மார்ச் மாதம். தெலுந்தனியாவில் உள்ள மறைவிடம் ஒன்று.
தோழர்களே நான் தலைவர் றோகணவை சந்திக்க அம்பாந்தோட்டை செல்கிறேன். நான் வரும்வரை தோழர் சகோதரி பிரேமாவதி இந்த முகாமிற்கு பொறுப்பாக இருப்பார் அவர் கூறும் கட்டளைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கிளர்ச்சிக்குரிய நாள் குறிக்கப்பட்டுவிட்டது. உங்களால் முடிந்தவரை அதிகளவான வெடிபொருட்களை தயார் செய்யுங்கள். மேலதிக விபரங்களை பிரேமாவதியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
தலைவர் வாழ்க சேயின் பாதையில் புரட்சி ஓங்குக.
தோழர்களே நான் தலைவர் றோகணவை சந்திக்க அம்பாந்தோட்டை செல்கிறேன். நான் வரும்வரை தோழர் சகோதரி பிரேமாவதி இந்த முகாமிற்கு பொறுப்பாக இருப்பார் அவர் கூறும் கட்டளைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கிளர்ச்சிக்குரிய நாள் குறிக்கப்பட்டுவிட்டது. உங்களால் முடிந்தவரை அதிகளவான வெடிபொருட்களை தயார் செய்யுங்கள். மேலதிக விபரங்களை பிரேமாவதியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
தலைவர் வாழ்க சேயின் பாதையில் புரட்சி ஓங்குக.
Thursday
அளவுக்குமீறிய ஆசையை வளர்த்தவங்க
எனக்கு ஒரு ஆசை எதிர்பார்ப்பு என்ரை ஒவ்வொரு பதிவுகளையும் தினமும் ஆயிரம்பேராவது படித்து ஆளுக்கு பத்து பின்னூட்டம் இடவேண்டும்.
இப்படி நான் சொன்னா என்ன சொல்லுவியள்.
கிறுக்குப்பய பிள்ளை அம்பலத்தான் எழுதுகிற திறத்தில பாவமே என்று பத்துப்பேர் பின்னூட்டம் எழுதுவதே பெரிய விசயம், அதற்குள் ஆசையைப்பார் ஆசையை, ஆசைக்கு அளவே இல்லையா? என்று திட்டாமல் விட்டியள் என்றால்
Somthing wrong என்றுதான் நினைக்கவேணும்.
Tuesday
இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது
எனது இளம்பிராயத்தில் நான் கல்விகற்றது கொழும்பு றோயல் கல்லூரி எனும் மூவின மக்களும் கல்வி கற்கும் பிரபல பாடசாலையில், வசித்தது மூவினமக்களும் கலந்து குடியிருந்த கொழும்பின் புறநகர்ப்பகுதி.
எனது வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளிக் குடியிருந்தவ சாந்தா. அவ காலையில் மடிப்பு கலையாத ஸ்கூல் யூனிபாரமும், அழகாக முகத்திற்கு பவுடர் பூசி, நெற்றியில சின்னதா ஒரு திருநீற்று குறி, நடுவில ஒரு குட்டி ஸ்டிக்கர்பொட்டு என அம்சமா வாசற்கதவை திறந்துகொண்டு தெருவில் இறங்கும்வரை காத்திருந்து நானும் புறப்படுவன்.
Friday
சொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்தில அதிகாரி.
ராசுக்குட்டியன் "ஓய் அம்பலத்தார் உமக்கு என்ன கிறுக்கு பிடிச்சுட்டுதே. கொஞ்சக்காலத்துக்குமுன் போராளியாக இருந்தன் என்றதுபோல கதைவிட்டீர். இப்ப என்னடா என்றால் என்ரை பிரண்ட் சிறிலங்கா இராணுவத்தில....." என்று புதுக்கதை ஒன்றை கிளப்புகிறீர் என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கவும்
Monday
ஸ்ரீரங்கத்து தேவதை பெற்றெடுத்த சுஜாதா
இன்று எழுத்தின் சிகரம் சுஜாதாவின் நினைவு நாள்.
மண்ணுலகைவிட்டு நீங்கியது ( 27-02-008).
சுஜாதா நான்கு வருடங்களின்முன் தன் உடலால் இவ்வுலகைவிட்டு மறைந்துபோனார். ஆனாலும் இப்புவி உள்ளவரை தமிழ் உள்ளவரை அவரது படைப்புக்களினூடாக வாழ்ந்துகொண்டே இருப்பார்.
என்னையும் எழுதத்தூண்டிய, எனது எழுத்துக்களின் முன்மாதிரி, ரோல் மாடல் எழுத்தாளர் சுஜதா என்று சொல்லிக்கொள்வதில் என்றும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நினைவாக....
Tuesday
காதல் சிட்டுக்கள் பெத்த முத்துக்கள்.
தமிழகத்து தமிழ் சிட்டுக்கள் இரண்டு சில காலங்களின் முன் எங்கள் வீட்டருகே கூடொன்றில் குடிவந்தன. தமிழகத்திலிருந்து பட்டமேற்படிப்பிற்காய் இங்கு வந்த அவர்கள். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து, திட்டமிட்டு படிப்பை முடித்து, வேலையாகி.....
சில நாட்களின்முன் அவர்களின் கூட்டில் குடியிருக்க சின்னஞ்சிறு சிட்டொன்றும் குடிவந்துவிட்டது. அண்மையில் பிறந்த அந்த குட்டிப்பாப்பாவை பார்க்க சென்றபோது படிக்க தந்த அவர்கள் காதல் டைரியின் சில பக்கங்களை அவர்கள் அனுமதியுடன் உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
Friday
கருணாகரமூர்த்தி சொல்லிய ஒரு அகதி உருவாகும் நேரம்
இந்தியாவிற்கு போயிருந்த நேரம் புத்தகக் கடையில கருணாகரமூர்த்தியின் ஒரு அகதி உருவாகும் நேரம் புத்தகத்துக்கு ஜெயமோகன் எழுதியிருந்த முகவுரையை நுனிப்புல் மேஞ்சதிலை அந்த முகவுரையை வடிவாகப் படிக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலைதான் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். மறந்துபோய் நீண்டகாலமாக அந்தப் புத்தகம் ஒரு ஓரத்திலை கிடந்திட்டுது. பலகாலத்தின்பின் ஞாபகம் வந்து எடுத்துப் படித்தேன். உண்மையிலேயே அற்புதமான படைப்புக்களின் தொகுப்பு அது.
Wednesday
Saturday
ஆகா கிடைச்சிடிச்சு.
களுகங்கையில் குளிக்கிற சுதுநோனா நயினாதீவு நாகவிகாரை செல்ல சுதந்திரம்
காலி பஸ்நிலையத்தில் பிச்சை எடுக்கும் புஞ்சிமண்டா யாழ்ப்பாண பஸ்நிலையத்திலும் பிச்சை எடுக்க சுந்திரம்.
கொழும்பு காமினி தெமிழ படு காண்ட யாப்பண யண்ட (காமினிக்கு தமிழ்
சரக்கடிக்க யாழ். செல்ல) சுதந்திரம்
மட்டக்களப்பு மரிக்கார் மருதனாமடச் சந்தியிலை கடை வைக்க சுதந்திரம்
Sunday
ஆக்கும்போதே கிக்கு ஏத்தும் தேங்காய்சாதம்
அம்பலத்தார் அதை எழுதி இதை எழுதி கடைசியலை எழுத விசயம் இல்லாம அட்டில்கூடத்திலை(அதுதான் சமையல்கட்டை சொல்லுறன்) வந்து நிக்கிறான் என்று முணுமுணுக்கிறது கேட்குது.
உங்களுக்கு எல்லாம் பதில் சொல்லமுன்னம் நாங்க இப்ப செய்யப்போற தேங்காய்சாதத்துக்கு வீட்டிலை தேங்காய் இல்லாதவங்க சட்டென்று ஓடிப்போய் தென்னையிலை ஏறுங்கோ. தென்னையிலை தேள் இருக்கிறதென்று ஊரிலை கதைக்கிறவை. காய் பிடுங்கிற அவசரத்திலை கண்டபடி கையை வைச்சு தேள்கொட்டினால் அதுக்கு நான் பொறுப்பில்லை. வீட்டிலை முழுத்தேங்காய் இருக்கிறவங்க தேங்காய உரிக்கிற வழியைப்பாருங்கோ. உரிச்ச தேங்காய் இருக்கிறவங்க பட்டென்று உடைச்சு பக்குவமா துருவுங்கோ நான் மாற்றரை சொல்லுறன்.
Thursday
அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவன் 18+ கலாட்டாக்கதை
ஜெகாவிற்கு கொழும்பு வந்ததில் செம சந்தோசம். இருக்காதா என்ன வாழ்நாள்
கனவாச்சே. நாட்டிலை இடம்பெற்ற போரினால் வன்னிக்கு அப்பால் வேறு எந்த
ஊருக்கும் இதுவரை அவனால் போகமுடியவில்லை. இப்ப சண்டை முடிஞ்சதுக்கு அப்புறம்
Friends எல்லோரும் பல இடங்கள் சுத்தி வாறதை பார்க்க ஜெகாவுக்கும் ஆசை
அதிகமாகி அப்பாவிடம் கேட்க பயத்திலை, அம்மாவை நச்சரித்துக்கொண்டே
இருந்தான். அம்மாவும் இந்த சாட்டுடனாவது ஒருதடவை கொழும்பு பார்க்கலாம் என்ற
நப்பாசையிலை அப்பாவுக்கு கொடுத்த அலுப்பிலை, அப்பாவும் பெரிய மனதுபண்ணி,
ஜெகா 10 ம் வகுப்பு பாஸ்பண்ணினால் கொழும்பு கூட்டிப்போவதாக
ஒத்துக்கொண்டார்.
Saturday
எழுத்துலக வியாபாரியே மாற்றுக்கருத்துக்களையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
மனுஷ்யபுத்திரன் மீது எனக்கு அண்மைக்காலம்வரை மிகவும் மதிப்பு இருந்தது ஆனால் அவரது அண்மைய கருத்துப்பதிவுகள், அவரும் வெறும் புகழும் வோட்டும் விரும்பும் அரசியல்வாதி போன்றவர்தான் என்பதாக இருக்கிறது. இவரும் எழுத்தை விற்கும் சுத்த வியாபாரிதான் என்பதை நிரூபித்துவிட்டார். இதுபோல எழுத்துலக வியாபாரிகள் சிலர் பரபரப்பிற்காகவும், தமது பெயர் பல இடங்களிலும் அடிபடவேண்டும் என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்.
அண்மையில் மனுஷ்யபுத்திரன் "பிராபகரன் கேம்பில்...." எனும் முகப்புத்தக குறிப்பொன்றில் விடுதலைபுலிகளையும் கவிஞர் காசியானந்தன் போன்றவர்களையும் கிண்டலடித்து எழுதியிருந்தார்.
Sunday
பிரபாகரனின் தத்துப்பித்துவங்கள் ஒரு அதிரடி அலசல்
பிரபாகரனின் தத்துபித்துவங்கள் ஆச்சரியமான பெயரில் ஒரு வலைப்பூ. பிரபாகரனின் தத்துபித்துவங்கள் எனும் பெயருக்கும் Wine Shop பானருக்கும் ஏற்ப பெரும்பாலான பதிவுகளும் மசாலா, சினிமா போன்றவற்றிகு அதிக இடம் கொடுக்கும் ஜனரஞ்சக பதிவுகளாக இருக்கின்றன. எது எதெற்கெல்லாமோ துரோகிப்பட்டம் கொடுக்கும் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் நம்ம ஈழத்தமிழ் உறவுகள் யாரும் பதிவர் பிரபாகரன், "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்" என்று பெயரிட்டு Wine Shop பனரிட்டு இந்தமாதிரி பதிவுகளை போட்டு நம்ம தலைவரையும் கொள்கைகளையும் நாறடிக்கிறானே என்று இதுவரை போர்க்கொடி தூக்காததும், துரோகிப்பட்டம் கொடுக்காததும் ஆச்சரியம்தான்.
வலைப்பூவின் Wine Shop பானர் அவரது வலைப்பூ பெயருடனும் அவரது கலந்துகட்டிய எழுத்தில் அமைந்த பதிவுகளுடனனும் ஒன்றிப்போகும் அளவிற்கு முகப்பு படமாக கொடுத்திருக்கும் முட்டிக்கு முட்டி மோதிக்கொள்வதுபோன்ற தோற்றப்பாட்டைக்கொடுக்கும் ஆளவந்தான் பானர் வலைப்பூவிற்கு நல்ல பொருத்தமானதாக தோன்றவில்லை
நித்யா http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/blog-post.html
நான் படித்தவரையில் நண்பர் பிரபா ஒரு கதை முயற்சி செய்திருக்கிறார். நித்யா பிரபாகரனது முதலாவது சிறுகதை முயற்சி. அது ஒரு சிறுகதை என்பதைவிட I.T. இளைஞன் ஒருவனது ஆரம்பகால அலுவலக அனுபவப் பகிர்வு என்றே சொல்லலாம். I.T. வேலையிடம் ஒன்றின் அன்றாட நிகழ்வுகளை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்திருப்பது பாராட்டிற்கு உரியது.
ஆரம்பத்தில் சுவாரசியமாக தொடங்கும் கதை போகப்போக தமிழ் பாடப்புத்தகத்தில் வரும் ஈர்ப்புத்தராத எதோ ஒரு பாடம்போல சுவாரசியம் குறைந்து செல்வதுபோல் தெரிகிறது. ஒரு நல்ல படைப்பானது வாசகனை அதை படிக்கும் ஒருசில நிமிடங்களாவது அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பவிடாது கட்டிப்போடவேண்டும். எனக்கு ஏனோ இக்கதையுடன் பூரணமாக ஒன்றிப்போக முடியவில்லை.
கதைக்கு முக்கியம் வார்த்தைப்பிரயோகம். எவ்வளவு நல்ல கதையையும் சொதப்பலான எழுத்து நடை மோசமானதாக்கிவிடும். பிரபா சாதாரண விடயங்களை பதிவிடும்போது கைவசப்படும் அளவிற்கு இங்கு வார்த்தைகளும் வாக்கியங்களும் கதையில் அவருக்கு கைகொடுக்காதது துரதிஸ்டமே.
அவர் இக்கதைமூலம் எதைக் கூறவருகிறார் என்பது புரியாமலே கதை நிறைவடைகிறது. நித்யா போன்ற பெண்கள் அடுத்தவரது பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதை சொல்லவருகிறாரா? அல்லது மேலதிகாரிகள் கைதேர்ந்த மேய்ப்பர்களாக மனோதத்துவம் தெரிந்தவர்களாக ஆடுகிற மாட்டை ஆடி பாடுகிறமாட்டை பாடி பால்கறப்பதுபோல வேலைவாங்குவதில் வல்லவர்கள் என்று கூறுகிறாரா? புரியவில்லை. கதை எழுதுவதில் அவர் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க கடந்துவரவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்றே கூறலாம்.
ஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டும்...!http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/blog-post_30.html
நான் படித்தவற்றில் பிரபாவினது ஜனரஞ்சக பதிவுகளில் "ஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டும்...!" சுவாரசியமானதாக இருந்ததுபோதிலும் அடிக்கடி ஞானியின் கருத்துக்களுடன் தன் பதிவுகளின் கருத்துக்களும் ஒத்துப்போவதாக குறிப்பிடுவதன்மூலம் தானும் ஞானி போல திறம்படச் சிந்தித்து எழுதுகிறேன் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்வது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
"கேரக்டர் – ப்ளேபாய் பரந்தாமன்" எனும் பதிவில் பரந்தாமன் எனும் கரக்டரை ரொம்ப இயல்பாக அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதுபோல இருந்தது. இந்தப்பதிவு அவரது நித்யா கதையைவிட நன்றாக இருக்கிறது.
பெரும்பாலான பதிவுகளிலும் அதிக விடயங்களை சொல்ல முனைந்திருக்கிறார். இது சாதா வாசகர்களிற்கு அனைத்துவிடயங்களையும் கிரகித்துக்கொள்ளாதுவிடும் சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம். சினிமா விமர்சனப்பதிவுகள் அவரது வலைப்பூவின் சிறப்பு அம்சமாக இருக்கிறது.
அவரது பதிவுகளையும் வலிப்பூவிற்கு வரும் பின்னூட்டங்களையும் வாசகர் வட்டத்தையும் பார்க்கும்போது ஒருவிடயம் நன்கு புரிகிறது. "புத்தகங்களை படிப்பதை விட மனிதர்களை படிப்பதில் அதிக விருப்பம்" என பிரபா தனது சுயவிபரத்தில் குறிப்பிட்டு உள்ளதுபோல அவர் வாசகர்களின் நாடி பிடித்து மனநிலை அறிந்து அவர்களைக் கவரும் வண்ணம் எழுதுவதில் வல்லவர் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
நேசமுடன் அம்பலத்தார்
பிரபாகரனின் தத்துபித்துவங்கள் ஆச்சரியமான பெயரில் ஒரு வலைப்பூ. பிரபாகரனின் தத்துபித்துவங்கள் எனும் பெயருக்கும் Wine Shop பானருக்கும் ஏற்ப பெரும்பாலான பதிவுகளும் மசாலா, சினிமா போன்றவற்றிகு அதிக இடம் கொடுக்கும் ஜனரஞ்சக பதிவுகளாக இருக்கின்றன. எது எதெற்கெல்லாமோ துரோகிப்பட்டம் கொடுக்கும் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் நம்ம ஈழத்தமிழ் உறவுகள் யாரும் பதிவர் பிரபாகரன், "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்" என்று பெயரிட்டு Wine Shop பனரிட்டு இந்தமாதிரி பதிவுகளை போட்டு நம்ம தலைவரையும் கொள்கைகளையும் நாறடிக்கிறானே என்று இதுவரை போர்க்கொடி தூக்காததும், துரோகிப்பட்டம் கொடுக்காததும் ஆச்சரியம்தான்.
வலைப்பூவின் Wine Shop பானர் அவரது வலைப்பூ பெயருடனும் அவரது கலந்துகட்டிய எழுத்தில் அமைந்த பதிவுகளுடனனும் ஒன்றிப்போகும் அளவிற்கு முகப்பு படமாக கொடுத்திருக்கும் முட்டிக்கு முட்டி மோதிக்கொள்வதுபோன்ற தோற்றப்பாட்டைக்கொடுக்கும் ஆளவந்தான் பானர் வலைப்பூவிற்கு நல்ல பொருத்தமானதாக தோன்றவில்லை
நித்யா http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/blog-post.html
நான் படித்தவரையில் நண்பர் பிரபா ஒரு கதை முயற்சி செய்திருக்கிறார். நித்யா பிரபாகரனது முதலாவது சிறுகதை முயற்சி. அது ஒரு சிறுகதை என்பதைவிட I.T. இளைஞன் ஒருவனது ஆரம்பகால அலுவலக அனுபவப் பகிர்வு என்றே சொல்லலாம். I.T. வேலையிடம் ஒன்றின் அன்றாட நிகழ்வுகளை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்திருப்பது பாராட்டிற்கு உரியது.
ஆரம்பத்தில் சுவாரசியமாக தொடங்கும் கதை போகப்போக தமிழ் பாடப்புத்தகத்தில் வரும் ஈர்ப்புத்தராத எதோ ஒரு பாடம்போல சுவாரசியம் குறைந்து செல்வதுபோல் தெரிகிறது. ஒரு நல்ல படைப்பானது வாசகனை அதை படிக்கும் ஒருசில நிமிடங்களாவது அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பவிடாது கட்டிப்போடவேண்டும். எனக்கு ஏனோ இக்கதையுடன் பூரணமாக ஒன்றிப்போக முடியவில்லை.
கதைக்கு முக்கியம் வார்த்தைப்பிரயோகம். எவ்வளவு நல்ல கதையையும் சொதப்பலான எழுத்து நடை மோசமானதாக்கிவிடும். பிரபா சாதாரண விடயங்களை பதிவிடும்போது கைவசப்படும் அளவிற்கு இங்கு வார்த்தைகளும் வாக்கியங்களும் கதையில் அவருக்கு கைகொடுக்காதது துரதிஸ்டமே.
அவர் இக்கதைமூலம் எதைக் கூறவருகிறார் என்பது புரியாமலே கதை நிறைவடைகிறது. நித்யா போன்ற பெண்கள் அடுத்தவரது பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதை சொல்லவருகிறாரா? அல்லது மேலதிகாரிகள் கைதேர்ந்த மேய்ப்பர்களாக மனோதத்துவம் தெரிந்தவர்களாக ஆடுகிற மாட்டை ஆடி பாடுகிறமாட்டை பாடி பால்கறப்பதுபோல வேலைவாங்குவதில் வல்லவர்கள் என்று கூறுகிறாரா? புரியவில்லை. கதை எழுதுவதில் அவர் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க கடந்துவரவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்றே கூறலாம்.
ஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டும்...!http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/blog-post_30.html
நான் படித்தவற்றில் பிரபாவினது ஜனரஞ்சக பதிவுகளில் "ஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டும்...!" சுவாரசியமானதாக இருந்ததுபோதிலும் அடிக்கடி ஞானியின் கருத்துக்களுடன் தன் பதிவுகளின் கருத்துக்களும் ஒத்துப்போவதாக குறிப்பிடுவதன்மூலம் தானும் ஞானி போல திறம்படச் சிந்தித்து எழுதுகிறேன் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்வது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
கேரக்டர் – ப்ளேபாய் பரந்தாமன் http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/blog-post.html
"கேரக்டர் – ப்ளேபாய் பரந்தாமன்" எனும் பதிவில் பரந்தாமன் எனும் கரக்டரை ரொம்ப இயல்பாக அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதுபோல இருந்தது. இந்தப்பதிவு அவரது நித்யா கதையைவிட நன்றாக இருக்கிறது.
பெரும்பாலான பதிவுகளிலும் அதிக விடயங்களை சொல்ல முனைந்திருக்கிறார். இது சாதா வாசகர்களிற்கு அனைத்துவிடயங்களையும் கிரகித்துக்கொள்ளாதுவிடும் சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம். சினிமா விமர்சனப்பதிவுகள் அவரது வலைப்பூவின் சிறப்பு அம்சமாக இருக்கிறது.
அவரது பதிவுகளையும் வலிப்பூவிற்கு வரும் பின்னூட்டங்களையும் வாசகர் வட்டத்தையும் பார்க்கும்போது ஒருவிடயம் நன்கு புரிகிறது. "புத்தகங்களை படிப்பதை விட மனிதர்களை படிப்பதில் அதிக விருப்பம்" என பிரபா தனது சுயவிபரத்தில் குறிப்பிட்டு உள்ளதுபோல அவர் வாசகர்களின் நாடி பிடித்து மனநிலை அறிந்து அவர்களைக் கவரும் வண்ணம் எழுதுவதில் வல்லவர் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
நேசமுடன் அம்பலத்தார்
Friday
Thursday
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 9
முன்னைய பகுதிகளை படிக்க
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 7
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 6
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 4
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 3
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 1
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 9
"இஞ்சருங்கோ என்ன அதுக்குள்ள............... நான் பக்கத்திலை வந்ததுகூடத் தெரியாமலுக்கு......."
"காலமை எழும்பினதிலையிருந்து அரக்கப்பரக்க வேலை செய்த அலுப்பிலை ஒரு ஐஞ்சு நிமிசம் கண் அயரமுதல் இப்ப என்ன நடந்ததென்று உந்த உலுப்பு உலுப்புறீர்."
"அது வந்தப்பா ..... நானும் என்ரை ஆசையளை உங்களிட்டைச் சொல்லாமல் வேற யாரட்டைத்தான் சொல்லுறது......" என்று செல்லம்மா தொடங்க
"அட உம்முடைய ஆசையெண்டால் அது என்ரை ஆசைமாதிரித்தானே" என்று கொண்டு கன்னத்திலை ஆசை ஆசையாக ஒன்றுகுடுக்க
"ஒரு சொல்லுச் சொல்ல முந்தி இப்படி வழிஞ்சுகொண்டு வாற உங்களோட யாரும் கதைக்க இயலுமே" என்று மனுசி செல்லமாக சிணுங்க..................
Tuesday
அம்பலத்தாரின் பார்வையில்
ஒரு குட்டிப் பதிவரின் எழுத்துலக சுட்டித் தனம் பற்றிய அலசல்!
வணக்கம், மச்சீஸ், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள். சக பதிவர் நண்பன் நிரூபனின் நாற்று வலைப்பூவில் ஒரு தொடர்விமர்சன பதிவு ஆரம்பித்திருக்கிறேன். படித்து உங்க கருத்துக்களை சொல்லுங்கோ.
நேசமுடன் அம்பலத்தார்.
நேசமுடன் அம்பலத்தார்.
Subscribe to:
Posts (Atom)