நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

மெல்ல தமிழ் இனி வாழும்

ரெவெரி என்ற பெயரில் ஒருவர் எனது பதிவு ஒன்றிற்கு சிலகாலங்களின் முன் பின்னூட்டம் இட்டிருந்தார். அப்பொழுதுதான் முதன்முதலாக ரெவெரி என்ற பெயரை அறிந்துகொண்டதில், என்ன இது இப்படி ஒரு வித்தியாசமான பெயராக இருக்கிறதே யாராக இருக்கும் என்ற ஆவலில் தேடத்தொடங்கியதில் மெல்ல தமிழ் இனி வாழும் வலைப்பூவில் போய் விழுந்தேன். அதற்கப்புறம் சிலகாலமாக தொடர்ந்து அங்கு உலாவியதில் மெல்ல தமிழ் இனி நிச்சயமாக புகுதிய மெருகுடன் வாழும் என்ற நம்பிக்கையுடன் உங்களிற்கு மெல்ல தமிழ் இனி வாழும் வலைப்பூவை அறிமுகப்படுத்துகிறேன்.

ஆச்சி சொல்லும் கதைகள்


எனது ஆச்சியிடம் கதை கேட்பதற்கு அந்தக்காலத்தில் எனக்கு அலாதி பிரியம். எந்த ஒருவிடயத்தை விளக்கவும் அவரிடம் எதாவது ஒரு கதை இருக்கும். சமைக்கும்போது வீட்டுவேலைகள் செய்யும்போது தோட்டவேலைகள் செய்யும்போது என எப்பொழுதும் யாரவது ஒருவருக்கு எதாவது ஒரு கதை சொல்லிக்கொண்டே இருப்பார்.