அம்பலத்தார் அதை எழுதி இதை எழுதி கடைசியலை எழுத விசயம் இல்லாம அட்டில்கூடத்திலை(அதுதான் சமையல்கட்டை சொல்லுறன்) வந்து நிக்கிறான் என்று முணுமுணுக்கிறது கேட்குது.
உங்களுக்கு எல்லாம் பதில் சொல்லமுன்னம் நாங்க இப்ப செய்யப்போற தேங்காய்சாதத்துக்கு வீட்டிலை தேங்காய் இல்லாதவங்க சட்டென்று ஓடிப்போய் தென்னையிலை ஏறுங்கோ. தென்னையிலை தேள் இருக்கிறதென்று ஊரிலை கதைக்கிறவை. காய் பிடுங்கிற அவசரத்திலை கண்டபடி கையை வைச்சு தேள்கொட்டினால் அதுக்கு நான் பொறுப்பில்லை. வீட்டிலை முழுத்தேங்காய் இருக்கிறவங்க தேங்காய உரிக்கிற வழியைப்பாருங்கோ. உரிச்ச தேங்காய் இருக்கிறவங்க பட்டென்று உடைச்சு பக்குவமா துருவுங்கோ நான் மாற்றரை சொல்லுறன்.