நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

ஏன் இந்த முரண்?


பிள்ளையளுக்கு தங்கட பிள்ளையளை வடிவா வளர்க்கத்தெரியவில்லையென்ற முணுமுணுப்பு அடிக்கடி பல வீடுகளிலையும் கேட்டுக்கொண்டுதான் இருக்குது.
இது ஒன்றும் புதுசில்லை

எங்கட தாத்தா பாட்டியும் எங்கட அப்பா அம்மாவை பார்த்து இப்பிடித்தான் முணுமுணுத்தவை.
அதையும் தாண்டி எங்கட பெற்றார் எங்களை நல்லபடியாத்தானே வளர்த்தவை.
பெரும்பாலும் இளைய தலைமுறையினர் தங்கட பிள்ளையளை குழந்தைகள் உளவியல், நவீன மருத்துவம், சுற்றுச்சூழல்.... என பலவிசயங்களையும் கவனத்தில்கொண்டு எங்க தலைமுறையைவிட இன்னும் நல்லப்படியாகத்தான் வளர்க்கினம். ஆனாலும் அதை பெரியவங்களால புரிந்துகொள்ளமுடியவில்லையோ ஏற்றுக்கொள்ளமுடியவில்லையோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் நல்லமாற்றங்களை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான் எமக்கும் நல்லது எதிர்கால சந்ததிகளுக்கும் நல்லது.


No comments: