மனுஷ்யபுத்திரன் மீது எனக்கு அண்மைக்காலம்வரை மிகவும் மதிப்பு இருந்தது ஆனால் அவரது அண்மைய கருத்துப்பதிவுகள், அவரும் வெறும் புகழும் வோட்டும் விரும்பும் அரசியல்வாதி போன்றவர்தான் என்பதாக இருக்கிறது. இவரும் எழுத்தை விற்கும் சுத்த வியாபாரிதான் என்பதை நிரூபித்துவிட்டார். இதுபோல எழுத்துலக வியாபாரிகள் சிலர் பரபரப்பிற்காகவும், தமது பெயர் பல இடங்களிலும் அடிபடவேண்டும் என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்.
அண்மையில் மனுஷ்யபுத்திரன் "பிராபகரன் கேம்பில்...." எனும் முகப்புத்தக குறிப்பொன்றில் விடுதலைபுலிகளையும் கவிஞர் காசியானந்தன் போன்றவர்களையும் கிண்டலடித்து எழுதியிருந்தார்.