நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவன் 18+ கலாட்டாக்கதை

ஜெகாவிற்கு கொழும்பு வந்ததில் செம சந்தோசம். இருக்காதா என்ன வாழ்நாள் கனவாச்சே. நாட்டிலை இடம்பெற்ற போரினால் வன்னிக்கு அப்பால் வேறு எந்த ஊருக்கும் இதுவரை அவனால் போகமுடியவில்லை. இப்ப சண்டை முடிஞ்சதுக்கு அப்புறம் Friends  எல்லோரும் பல இடங்கள் சுத்தி வாறதை பார்க்க ஜெகாவுக்கும் ஆசை அதிகமாகி அப்பாவிடம் கேட்க பயத்திலை, அம்மாவை நச்சரித்துக்கொண்டே இருந்தான். அம்மாவும் இந்த சாட்டுடனாவது ஒருதடவை கொழும்பு பார்க்கலாம் என்ற நப்பாசையிலை அப்பாவுக்கு கொடுத்த அலுப்பிலை, அப்பாவும் பெரிய மனதுபண்ணி, ஜெகா 10 ம் வகுப்பு பாஸ்பண்ணினால் கொழும்பு கூட்டிப்போவதாக ஒத்துக்கொண்டார். 


ஒரு வழியாக ஜெகாவும் 10ம் கிளாஸ் பாசானதிலை கொழும்பிலை இருக்கிற மாமி வீட்டிற்கு போய் சேர்ந்தினம். ஊரிலை இருந்து புறப்பட்டது தொடக்கம் ஜெகாவுக்கு எல்லாமே புதுமையாக இருந்தது.


மாமி வீட்டிலை போய் சேர்ந்து எல்லாருமாக உட்கார்ந்து கொஞ்சநேரம் கதைச்ச பிறகு மாமி " டேய் ஜெகா போய் பல் துலக்கி குளித்தாயென்றால் பிரயாணக் களை போகும்" என்று குளியல் அறையை காட்டினா. ஊரிலை குளத்திலை குதிச்சு நீந்திக் குளித்த ஜெகாவுக்கு அறையுக்கை குளிக்கிறதை நினைத்து பார்க்கவே எதோ செய்தது. கொஞ்சநேரம் தன்னை மறந்து நின்றிட்டான். ஒரு வழியாக சுதாகரித்துக்கொண்டு உடைகளை கழட்டி குளிக்க தயாராகவும் சட்டென்று கதைவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த சுமா, இவன் நின்றதையும் அவனின்றை கோலத்தையும் பார்த்து ஒருகணம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவள், அதை ஒருகணம் பிரமிப்போட பார்த்திட்டு....
"வாவ்! என்னடா ஜெகா ஆறுமாதத்திற்கு முன்னம் நான் வன்னிக்கு வந்திருக்கேக்கை தெரிஞ்சும் தெரியாதமாதிரி இத்துனூண்டு சின்னதா இருந்தது, அதுக்குள்ளை எப்படிடா இவ்வளவு பெரிசா வளர்ந்திருக்கு" என்று சொல்லவும் நம்ம ஜெகா வெட்கத்திலை "சீ போ" என்றபடி சட்டென்று பக்கத்திலை இருந்த ரவலை எடுத்து சுத்திக்கொண்டான். 

அதற்குள் மாமி "சுமா! எடி சுமா!" என்று கத்தவும் .
J"ust comming மா" என்று தாயிற்கு பதில் கத்தல் கத்திக்கொண்டு, ஜெகா கொஞ்சமும் எதிர்பார்க்காதமாதிரி சுமா சட்டென்று எட்டி அதை ஆசையா தடவிப்போட்டு, "எங்கை போயிடுவாய் ஒருகிழமைக்கு இங்கைதானே நிற்கப்போறாய். அப்புறமாக உன்னை கவனிக்கிறன்." என்று சொல்லிக்கொண்டு குசினிப்பக்கம் ஓடினாள். ஜெகாவுக்கு நடக்கிறது எல்லாம் கனவோ நிஜமோ என்றே விளங்காமல் வெலவெலத்துப்போய் நின்றிட்டான்.


கொஞ்ச நேரத்திலை சுமா கைத்தொலை பேசியிலை தன்ரை Friend Radchi உடன் பேசிக்கொண்டிருந்தவள்.

"Hee you know  என்ரை மச்சி வன்னியிலையிருந்து வந்திருக்கான்டி. Looks so Handsome! அவனின்றை அதை பார்த்து Realy பயந்திட்டன்டி. நான் ஊருக்கு போயிருந்தப்பகூட small ஆக இருந்தது Now it looks realy very big டி. பார்த்ததும் realy கட்டிப்புடிச்சு Kiss அடிக்கணும்போல இருந்திடிச்சுடி. நீ பார்த்தே விடவே மாட்டாய் எனக்கு வில்லி ஆகிடுவேடி என்று கிசு கிசுத்தாள்.

தொலைபேசியின் மறுபக்கத்திலை இருந்து "உண்மையாவே?  நீ சொல்லுறதைக் கேட்டால் எனக்கும் ஒருதடவையாவது அதை பார்க்கணும்போல இருக்குடி. Please Please டி பின்னேரம் மெதுவா அவனை Beach பக்கம் தள்ளிட்டு வந்திடேன்" என்று ரட்சி ஏக்கமாக கேட்டாள்.


சுமாவுக்கும் தன்ரை மச்சான்ரை அதை பார்க்க Friend ஆசைப்படுகிறதிலை கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. ஆனலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல். 

"Ok Ok I will try my best டி! என்றாள் பந்தாவோட.

சாய்ங்காலமா சுமா
நல்லபிள்ளைபோல  "அம்மா அத்தான் பாவம் கொழும்பு பார்க்க வந்திட்டு ஒன்றையுமே பார்க்காமல் வீட்டுக்குள்ளையே இருக்கிறான். விருப்பமென்றால் வெள்ளவத்தை Beach இற்கு கூட்டிக்கொண்டுபோய் காட்டட்டே." என்றாள் . தாயும் சரியென்று சொல்ல சுமா ஜெகாவை கூப்பிடுற சாட்டிலை அவன் தங்கியிருக்கிற அறையிற்குப் போனாள். அங்கை அவன் வெறும் சாரத்தோடைமட்டும் மேலை சட்டை ஒன்றும் போடாமல் கட்டில்லை கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தான். சுமாவும் அவனை எழுப்புகிற சாட்டிலை அதிலை தொட்டுத் தட்டி எழுபுகிறமாதிரி தட்டி, தடவிக்கொண்டு, "அத்தான் எழும்புங்கோ Beach இற்கு போவம்" என்றாள். அவனுக்கும் அதிலை தொட்டுத் தடவி எழுப்பினது கிளுகிளுப்பாக இருந்ததிலை மேலும் கொஞ்சநேரம் கண்ணை மூடிக்கொண்டு அவளின்ரை ஸ்பரிசத்தை ரசித்துக்கொண்டு இருந்திட்டு மெதுவா எழும்பினான்.

ஒருமாதிரியாக அவனை எழுப்பி வெளிக்கிடச் சொல்லிப்போட்டு ரட்சிக்கும் போன்பண்ணி Beach ல் சந்திப்பம் என்று சொல்லிப்போட்டு ஜெகாவோட Beach இற்கு போய் சேர்ந்தாள். இவங்களை கண்ட ரட்சி "என்னடி இவ்வளவு Late ஆக வாறியள். ஆசை ஆசையாக அதை ஒருக்கால் நானும் வடிவா கிட்டத்திலை தொட்டு பார்க்கவேணும் என்று வந்தால் இப்படி இருண்டபிறகு வந்து சேருறியள்." என்றாள் கொபமாக.


பிறகு மூன்றுபேருமாக கொஞ்சநேரம் உட்கார்ந்து கதைத்துக்கொண்டிருக்கேக்கை ரட்சியும் மெதுவாக ஏக்கமாக இருட்டிற்குள்ளே தட்டுத்தடுமாறி தேடிப்பிடித்து அவனின்ரை அதை தொட்டு தடவிப்பார்த்திட்டு "வாவ் ஒரு பெடியனுக்கும் இவ்வளவு நீளமா, நிறைஞ்ச முடியோட அதை நான் பார்த்ததே இல்லையடி" என்று கிசுகிசுத்தாள்.


ஜெகாவுக்கும் அது சந்தோசமாகவும் ஒருவித கிளுகிளூப்பாகவும் இருந்தாலும் உள்ளுக்கு
ள்ளை ஒரு பயமும் உண்டானது. என்னடா இது வம்பாக்கிடக்கு எனக்குமட்டும் மற்ற ஆம்பிளையளுக்கு இல்லாதமாதிரி அது வித்தியாசமாக இருக்குதோ என்று யோசித்தான். ஒருவழியா ஒன்பதுமணிக்கு வீட்டைபோய் சேர்ந்தாங்கள்.


அடுத்த ஒன்று இரண்டு நாளுக்கிடையிலை இரண்டு பெட்டையளும் ஆளாளுக்கு e.mail, SMS, telephone என்று ஊர்முளுக்க அந்தக்கதையை பரப்பி, தினத்துக்கும் கன பெட்டையள் அதை புதினம் பார்க்க வரத்தொடங்கிவிட்டாகள். இதுக்கிடையிலை  யாரோ ஒருத்தி "அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவனின் பக்கம்" என்று முகப்புத்தகத்திலை ஒரு Fan page தொடங்கிவிட ஒரே நாளைலையே அதற்கு பதினைந்தாயிரத்துக்கு அதிகமான அங்கத்துவர்கள் சேர்ந்துவிட்டார்கள்.


இப்படியே இந்த கதை கடைசியிலை எங்கட ஜனாதிபதியின்ரை பெண்டாட்டி காதிலையும் விழுந்திட்டுது. இந்த ஆளும் இருக்கிறாரே ஒருசத பிரயோசனமும் இல்லாமல் இவரைக்கட்டி என்ன சந்தோசத்தை கண்டன். இப்ப எனக்கு என்ன வயசே போட்டுது ஐம்பது வயதுதானே ஆகிறது. உவன் பெடியனை கொஞ்ச நாளுக்கு வீட்டை கொண்டுவந்து வைச்சிருப்பம், சந்தோசப்பட்டுக்கொள்ளுவம் என்று முடிவெடுத்தா. 


எடுபிடி மந்திரி ஒருவருக்கு போன் செய்து "என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்கு தெரியாது ஆனால் "அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவனை" கேள்விப்பட்டனியே அவனை எப்படியாவது இன்றைக்கு இரவுக்குள்ளை யாருக்கும் தெரியாமல் கடத்திக்கொண்டுவந்து என்னிடம் ஒப்படைக்கவேணும்" என்று கத்தினா.


          எடுபிடியாருக்கு தெரிஞ்சுபோச்சுது இனி எப்படியும் அம்மா "அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவனை" ஒருவழிபண்ணாமல் விடமாட்டா என்று. சட்டென்று வெள்ளை வானை எடுத்துக்கொண்டு தன்ரை உதவியாள் இரண்டுபேரையும் கூட்டிக்கொண்டு அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவனின் விலாசத்தை தேடி அறிந்து வெள்ளவத்தையிலை அவனிருந்த வீட்டிற்கு போய் சேர்ந்தார். 


வீட்டிற்குள்ளை போய் வீட்டிலை இருந்த எல்லாரையும் மிரட்டி கடைசியிலை நம்ம ஜெகாவை கண்டுபிடிச்சிட்டார். சத்தம் போடாமல் வெள்ளை வானிலை ஏறி எங்களோடை வரவேணும். ஜனாதிபதிபொண்டாட்டி உன்னை கொண்டுவரச்சொன்னவ,  இத்தனை காலமாக அவ சொல்லுறதெல்லாம் செய்துகொண்டு திரிஞ்சும் எங்களுக்கு அடிக்காத யோகம் உனக்கு அடிச்சிருக்கு, பேசாமல் எங்களோட வந்திடு. சத்தம்போட்டு ஊரைக்கூட்ட வெளிக்கிட்டியோ.... இதாலை உன்னை சுட்டுத்தள்ளிப்போடுவன் என்று தன்ரை சின்ன துவக்கை தூக்கி காட்டினார். பயத்திலை அவரின்ரை காலைப்பிடித்து கெஞ்சின ஜெகாவை  கரகர என வெளியே இழுத்துவந்து வானுக்குள்ளை அடைந்துகொண்டு போய் ஜனாதிபதி பெண்டாட்டியிடம் அவனை ஒப்படைச்சார். அவவும் ஜெகாவை தன்னோட மாளிகையிலை வச்சிருந்து தன்ரை ஆசையை கொஞ்சம் கொஞ்சம் நிறைவேற்றிக்கொண்டா.


இதுக்கிடையிலை இந்தக்கதை எப்படியோ ஜனாதிபதியின்ரை தம்பி பெண்டாட்டி காதிலையும் விழுந்திட்டுது. உடனையே அவவுக்கும் ஆசை பத்திக்கொள்ள, அவ ஜனாதிபதி பெண்டாட்டிக்கு போன்போட்டு "அடியே உனக்கு இந்த வயசிலை "அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவன்" தேவைப்படுகிறானோ. அவனை என்னிடம் ஒப்படைச்சிட்டு பேசாமல் இழுத்துமூடிக்கொண்டு இரு. இல்லையென்றால் உன்ரை புருசனின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏத்திவிடுவன் என்று சத்தம் போட்டா."   இருவருக்கும் சண்டை பெரிசாகி கடைசியிலை "அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவனை" ஒரு கிழமைக்கு சின்னவர் பெண்டாட்டியிடம் ஒப்படைப்பது என்று முடிவாச்சுது.


பிறகென்ன நம்ம ஜெகா ரகசியமாக மற்றொரு வெள்ளைவானில் சின்னவர் பெண்டாட்டியிடம் போய் சேர்ந்தான். கொஞ்சநாளா தனக்கு நடக்குறதுகளை பார்த்து வெறுத்துப்போன ஜெகா அது இருக்கிறதாலைதானே இவ்வளவு பிரச்சனையளும் கஸ்டமும், நல்ல கூரான கத்தி அல்லது கத்தரிக்கோல் கிடைச்சால் பேசாமல் அதை ஒட்ட வெட்டினால் என்ன என்றுகூட யோசித்தான். 


இதற்கிடையிலை இந்தவிசயங்கள் தொடர்பாக கொழும்பிலை இருக்கிற அமெரிக்க தூதுவர் அமெரிக்காவில் உள்ள CIA தலைமையகத்துக்கு அனுப்பின ரகசிய செய்திகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுவிட்டது.

இதை படித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பெண்டாட்டிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்ரை புருசன் முந்தி ஜனாதிபதியாக இருக்கேக்கை அவரின்ரை செயலாளர் பெட்டை மோனிக்கா, அலுவலகத்திலை என்ரை மனுசனின்ரை மேசைக்கு கீழே புகுந்து இருந்த கதையளை எல்லாம் பத்திரிகையிலை படிச்சும் TV யிலை பார்த்தும் எவ்வளவு வேதனை பட்டிருப்பன். புருசனை பழிவாங்க இதுதான் நல்ல சந்தர்ப்பம்,  "அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவனை" எப்படியாவது எவ்வளவு செலவுபண்ணியாவது அமெரிக்காவுக்கு கடத்திக்கொண்டு வரச்செய்து வீட்டோடை ரகசியமாக வச்சிருந்து, அவன்ரை அதை அப்பப்ப ஆசையா தடவிறதையும், பிடிக்கிறதையும் படம்பிடிச்சு ரகசியமாக கசியவிட்டன் என்றால் என்ரை புருசனும் நான் பட்ட வேதனைகளையும் அவமானங்களைம் சந்திப்பார் என்று நினைத்துக்கொண்டா. 


தனக்கு தெரிந்த ஒரு ரகசிய ஏஜென்ர் மூலமாக அது அளவுக்குமிஞ்சி வளர்ந்த ஜெகாவை அமெரிக்காவுக்கு கடத்திவர ஏற்பாடு செய்தா.

அந்த ஏஜென்ரும் எப்படியோ ஜெகாவை தேடிப்பிடித்து கடத்தி திருட்டு Passport உம் தயார்பண்ணி அமெரிக்கா போற விமானத்திலையும் ஏத்திப்போட்டான். ஜெகாவுக்கு பயத்திலை ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு வெலவெலத்து போனான். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி
பெண்டாட்டியோட  தான் இருக்கிறது  வெளியே தெரிய வந்தால் CIA காரனுகள் தன்னை கொன்றே போடுவங்கள் என்று நினைச்சதிலை, இனியும் பொறுக்க இயலாது என்று நினைத்துக்கொண்டான். 

பக்கத்து சீற்றிலை இருந்தவர் சிகரட் பத்தவைக்க எடுத்த லைட்டரை வாங்கி இவ்வளவு அடர்த்தியா நீளமா என்ரை தாடி வடிவாக இருக்கிறதாலைதானே இவ்வளவு பெண்டுகளும் என்னை இப்படி வதைக்கிறாளுகள். இந்த லைட்டராலையே இதி எரிச்சு பொசிக்கிடுறன். இனி ஒருத்தியும் என்ரை தாடியை பார்த்து ஆசைப்பட இயலாது. என்றவாறு தாடி முடியை லைட்டராலை சுட்டு பொசுக்கத்தொடங்கினான்.






பிற்குறிப்பு: இந்த கதையை படிச்சவை அம்பலத்தார் எப்படி பெண்களை இவ்வளவு கேலி பண்ணி எழுதலாம். அல்லது எப்படி இவ்வளவு ஆபாசமாக  எழுதலாம் என்று திட்டவேணும் என்று நினைச்சியள் என்றால் முதலில் பிரபல கதை சொல்லி கி.ரா. அவர்களை திட்டிவிட்டு அப்புறம் வந்து என்னை திட்டுங்கோ. ஏனென்றால் கி.ரா. அவர்கள் முன்பு எழுதிய இருதலைமணியன் - நாட்டுப்புற பாலியல் கதை என்ற ஒரு கதையை படிக்கும்போதுதான் எனக்கு இந்தக் கதையை எழுதும் எண்ணம் வந்தது. முன்பு எழுதிய அந்தக்கதைபோல ஒரு கதையை இப்பொழுது அவர் எழுதுவதாயின் எப்படி எழுதுவார் என எண்ணிப்பார்த்தேன் அதுதான் இப்படி எழுதினனான். "யோ கிறுக்குப்பய பிள்ளை அம்பல்த்தார், எழுதுறதை எழுதிப்போட்டு யாரது உங்க அப்பனோ, பாட்டனோ அந்தக் கிறுக்குபய கி.ரா. வை எதுக்கு துணைக்கு இழுக்கிறாய்" என்று உணர்ச்சி வசப்பட்டு கேட்டுப்போடதையுங்கோ ஏனென்றால் கி.ரா. என்கிற கி. ராஜநாராயணன் என்னைப்போல சும்மா பிலிம் காட்டிக்கொண்டிருக்கிற வெத்துப்பயல் கிடையாது.

கி.ரா.  கரிசல் இலக்கியத்தின் ஆணிவேராக கருதப்படுபவர். இவரின் கதைகள் பெரும்பாலும் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், வாழ்வையும் சித்தரிப்பவை. ஒரு விவசாயியான கி.ரா. இயல்பில் ஒரு கைதேர்ந்த கதை சொல்லி. "நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்" என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது ஆகிய தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர் கி.ரா. அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால்
விக்கிபீடியா கி. ராஜநாராயணன்   இல் அவரைப்பற்றி படிக்கலாம். 

அப்பாடா இப்படியாவது அந்த உன்னத கதைசொல்லியைபற்றி நாலு வார்த்தை நல்லபடியாக சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுதென்றதிலை ஒரு சின்ன சந்தோசம் அவ்வளவுதான்.
Just enjoy the fun. Thats all


நேசமுடன் அம்பலத்தார். 



24 comments:

ஹேமா said...

கொஞ்சம் மனசுக்க ஒருமாதிரிக் கூச்சமா பயமா இருந்தாலும் அத்துமீறி எழுதமாட்டீங்கள் எண்டு தெரியும்தானே.ஆனாலும் உங்களுக்குள்ளயும் ஒரு பயம்.
அதாலதானே கி.ரா அவர்களைத் துணைக்குக் கூட்டி வந்தனீங்கள்.இதுதான் நாங்கள் !

பராசக்தி said...

அம்பலத்தாரா! இப்படியா எழுதுவார்....... என்று முதல் பந்தி முடித்து இரண்டாம் மூன்றாம் பந்தி என்று தொடரும் போதே புரிந்து விட்டது. எதிர் பார்த்த முடிவு தான். ஆனால் எழுதிய விதம் அபாரம். "களவும் கற்று மற".

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா. அப்பலத்தார் ஜயா இந்தக் கதைக்கு மட்டும் கொஞ்சம் தலைப்பை மெருக்கூட்டி வைச்சிருந்தால் மெகா ஹிட் பதிவாக மாறியிருக்கும்

எனக்கு படிக்கும் போதே தெரிந்துவிட்டது ஆனால் நான் தலை முடி என்று நினைத்தேன் கடைசியில் தாடியில் முடிந்துவிட்டது

Anonymous said...

ஒரு நல்ல வெர்ஷனில் இருதலைமணியன். சூப்பர் சார்!
என் வலையில் : கி.ரா.வின்

ராசா தேடின பொண்ணு! - நாட்டுப்புறகதை

ம.தி.சுதா said...

ஐயா அங்களின் எழுத்துச் சுட்டலின் ஊடே... கொழும்பிற்கும் வன்னிக்கும் இடையில் ஒரு மனித வேறுபாட்டைக் காட்டியுள்ளீர்கள் நன்றி...

ம.தி.சுதா said...

ஐயா ஆண்டாள் பாசுரத்தில் உள்ளதை விடவா நீங்கள் எழுதிவிட்டீர்கள்...

கோகுல் said...

நல்லா வளத்திருக்கீங்க கதையை.

அம்பலத்தார் said...

ஹேமா said...
//கொஞ்சம் மனசுக்க ஒருமாதிரிக் கூச்சமா பயமா இருந்தாலும் அத்துமீறி எழுதமாட்டீங்கள் எண்டு தெரியும்தானே.ஆனாலும் உங்களுக்குள்ளயும் ஒரு பயம்.
அதாலதானே கி.ரா அவர்களைத் துணைக்குக் கூட்டி வந்தனீங்கள்.இதுதான் நாங்கள் !//
உங்களது, எனது, எங்களது சமுதாயத்தினது மனநிலைகளை மூன்றே வசனங்களில் அப்படியே கூறிவிட்டீர்கள்.

அம்பலத்தார் said...

பராசக்தி said...
//அம்பலத்தாரா! இப்படியா எழுதுவார்....... என்று முதல் பந்தி முடித்து இரண்டாம் மூன்றாம் பந்தி என்று தொடரும் போதே புரிந்து விட்டது. எதிர் பார்த்த முடிவு தான். ஆனால் எழுதிய விதம் அபாரம். "களவும் கற்று மற".//
வணக்கம் பரா, உங்கள் நம்பிக்கைக்கும் பாராட்டுகளிற்கும் நன்றி. அம்பலத்தார் இப்படித்தான் என்று எந்த ஒரு தோற்றத்தையும் உண்டுபண்ணி எல்லை வகுத்துக்கொள்ள விரும்பவில்லை. எம்மிடையே இருக்கும் அனைத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருக்க விரும்புகிறேன்

அம்பலத்தார் said...

K.s.s.Rajh said...
//ஹா.ஹா.ஹா.ஹா. அப்பலத்தார் ஜயா இந்தக் கதைக்கு மட்டும் கொஞ்சம் தலைப்பை மெருக்கூட்டி வைச்சிருந்தால் மெகா ஹிட் பதிவாக மாறியிருக்கும்//
பின்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்து பதிவு எவ்வளவு பிரபலமடைந்தது என்பதை கணிப்பிட முடியாது என்பதற்கு இந்த பதிவு ஒரு எடுத்துக்காட்டு. பதிவிட்ட முதல் நாளில் மட்டும் இந்தப்பதிவிற்கு 900 வாசகர்களிற்கு அதிகமாக வருகை தந்திருந்தனர். என்னைப்பொறுத்தவரையில் இது பெரும் ஹிட் என நினைக்கிறேன்.

அம்பலத்தார் said...

Chilled beers said...
//ஒரு நல்ல வெர்ஷனில் இருதலைமணியன். சூப்பர் சார்!//
Thanks உங்க வலையில்தானே நண்பா கி.ராவின் அந்தக்கதையை படித்தேன்.

முத்தரசு said...

கதை ரொம்ப பெரிசுதான்.....பகிர்வுக்கு நன்றி

பி.அமல்ராஜ் said...

ஹி ஹி ஹி... கலக்கிட்டீங்க போங்க.. எப்பிடி எப்பிடியெல்லாம் எங்கள ஜோசிக்க வச்சுப்புட்டீங்க??? கதையை 18+ கதைபோல கொண்டுபோய், அதுவும் சமகால விடயங்களுடம் ஒட்டி நகர்த்தியிருப்பது மிகவும் அருமை. வாழ்த்துக்கள். கி.ரா. பற்றியும் அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.

அம்பலத்தார் said...

ம.தி.சுதா♔ said...
//ஐயா உங்களின் எழுத்துச் சுட்டலின் ஊடே... கொழும்பிற்கும் வன்னிக்கும் இடையில் ஒரு மனித வேறுபாட்டைக் காட்டியுள்ளீர்கள் நன்றி...//
மதி, மேலோட்டமாக படிக்காமல் கூர்ந்து படிக்கும் ஒரு வாசகனாக உங்களை அறியமுடிந்ததில் மகிழ்ச்சி.

அம்பலத்தார் said...

ம.தி.சுதா♔ said...
// ஐயா ஆண்டாள் பாசுரத்தில் உள்ளதை விடவா நீங்கள் எழுதிவிட்டீர்கள்...//
புரிதலிற்கு நன்றி மதி.

அம்பலத்தார் said...

கோகுல் said...
//நல்லா வளத்திருக்கீங்க கதையை//
ஓகோ! ரொம்ப வளர்ந்திட்டுதோ?

அம்பலத்தார் said...

மனசாட்சி said...

//கதை ரொம்ப பெரிசுதான்.....//
ஆமா ஆமா புரியுது, ரொம்ப பெரிசுதான்.

அம்பலத்தார் said...

பி.அமல்ராஜ் said...
//ஹி ஹி ஹி... கலக்கிட்டீங்க போங்க.. எப்பிடி எப்பிடியெல்லாம் எங்கள ஜோசிக்க வச்சுப்புட்டீங்க???//

நீங்க அப்படி என்னதான் யோசிச்சிங்க அதை கொஞ்சம் சொல்லுங்க அமல்

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
இன்று தான் இந்தப் பதிவு என் கையில் சிக்கியது.

பாதிப் பதிவினைப் படிக்கையில் ஒரே கிளு கிளுப்பாக இருந்திச்சு,
அப்புறமா கடையில் பல்பு கொடுத்து தாடி பத்தியும் சொல்லியிருக்கிறீங்க.

துணைக்கு புகழ் பெற்ற எழுத்தாளர்களை அழைத்து அது பற்றி ஓர் அதுவான அத்தியாயம் சொல்லியிருக்கிறீங்க.

அந்த சுமா பொட்டை இப்போ எங்கே?

ஹாலிவுட்ரசிகன் said...

இதுவரை அதிகம் உங்கள் பதிவுகளை வாசிக்காததால் ஏதோ வில்லங்கமான பதிவென்டு நினச்சு தான் வாசித்துக் கொண்டே போனேன். கடைசில தாடில முடித்துவிட்டீங்களே? ஆனாலும் கடைசிவரை மிகவும் சுவாரஸ்யமாக பதிவை நகர்த்தியிருக்கிறீர்கள்.

பி.கு - சுமாவின்ர நம்பர் கிடைக்குமா??? :P

அம்பலத்தார் said...

நிரூபன் said...
//...பாதிப் பதிவினைப் படிக்கையில் ஒரே கிளு கிளுப்பாக இருந்திச்சு,
அப்புறமா கடையில் பல்பு கொடுத்து தாடி பத்தியும் சொல்லியிருக்கிறீங்க.../
அடேங்கப்பா நிரு நீங்களே பல்பு கொடுக்கிறதில கில்லாடி உங்களுக்கே பல்பு கொடுத்திட்டனா ஆவ்வ்வ்வ்......

அம்பலத்தார் said...

நிரூபன் said...
//அந்த சுமா பொட்டை இப்போ எங்கே?//
நிரூ காதைக் கிட்ட கொண்டுவாங்கோ உங்களுக்குமட்டும் ரகசியமாக சுமா இருக்கிற இடத்தை சொல்லுறன்

அம்பலத்தார் said...

ஹாலிவுட்ரசிகன் said...
// ....பி.கு - சுமாவின்ர நம்பர் கிடைக்குமா??? :P....//

உங்க முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஹாலிவுட்ரசிகா! உங்களுக்கு முன்னாடி கேட்ட நிரூவிற்கு சுமாவின்ரை விபரமெல்லாம் சொல்லி தொலைபோசி இலக்கத்தையும் ரசியமாக சொல்லியிருக்கிறன் உங்களுக்கும் தேவையென்றால் கேட்டு வாங்குங்கோ!

எஸ் சக்திவேல் said...

முடிவு எதோ விதியாசமாக இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால், இது கொஞ்சம் சிக்கலான பிரச்சினை!