தமிழீழத்தில் என்றுமே நிகழ்ந்திராத சில மணி நேரத்தில் வரலாறுகாணாத உயிர், உடமை பேரழிவுளை ஏற்படுத்தி மிகப்பெரும் அழிவுகளைத் தந்த சுனாமி பேரலை ஏற்பட்டு இன்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடலை நம்பி, கடலே வாழ்வாக வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை இந்தோனேசியாவின் சுமாத்திராதீவின் கடற்பரப்பில் பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா,தென்னிந்தியா, தமிழீழம், சிறிலங்கா, போன்ற நாடுகளை தாக்கி தனது கோரப்பசியை தீர்த்துக்கொண்டு சில மணிநேரத்திலேயே வந்த சுவடு தெரியாமல் அடங்கிப்போனது.
அம்பாறையும், மட்டக்களப்பும், தென்னிலங்கையின் காலி, ஹிக்கடுவ போன்ற கடலோரப் பிரதேசங்களும் பாதிக்கப்பட்டன.
நாம் மனிதர்கள்தான் இனம், மொழி, சாதியென பிரிந்து நின்று மோதிக்கொள்கிறோம், இயற்கை தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் என்ற பேதமின்றி ஆழிப்பேரலைமூலம் அனைத்து இன மக்களையும் காவுகொண்டது.
வடமராட்சியின் கடற்கரையோரங்களிலும் பாதிக்கப்பட்ட கட்டடங்களும் படகுகளும் ஆழிப்பேரலை அவலங்களின் சாட்சியாக இன்னமும் காட்சிதருகின்றன.
ஆழிப்பேரலையின் அவலங்களை இவ்வளவு சீக்கிரத்தில் மறந்த எமக்கு முள்ளிவாய்க்காலின் பேரவலங்களை மறக்க ?...........
புலம்பெயர் நாங்கள் இதையும் விரைவில் மறந்துவிடுவோம். ஏனெனில் தாயக மக்களின் உண்மையான நல்வாழ்வுபற்றியும், அவற்றை அடைவதற்கான தொலைநோக்கு பார்வைகொண்ட தீர்வுகள்பற்றியும் எம்மில் எத்தனைபேர் இதயசுத்தியுடன் சிந்திக்கிறோம். தாயக உறவுகளின் வாழ்வாதாரப்பிரச்சனைகள், அவர்களது அரசியல், அவர்களது நிரந்தர அமைதியான கௌரவமான வாழ்வுபோன்ற விடயங்கள் சுயலாபங்களுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், அந்தஸ்திற்காகவுமே நம்மில் பலராலும் பேசப்படுகின்றது. எவ்வளவு தூரம் இதயசுத்தியுடன் செயற்படுகிறோம். சிந்திப்போமா?
9 comments:
// நாம் மனிதர்கள்தான் இனம், மொழி, சாதியென பிரிந்து நின்று மோதிக்கொள்கிறோம், இயற்கை தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் என்ற பேதமின்றி ஆழிப்பேரலைமூலம் அனைத்து இன மக்களையும் காவுகொண்டது.///
மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு இயற்கை தண்டனைகள் தருகிறது...
உண்மையாகவே இயற்கையைவிட மதம், இனம், ஜாதி என்று பலவற்றை காரணங்களாக கொண்டு போர்களின் மூலம் நாமே பல கோடி உயிர்களை எடுக்கிறோம்.மனிதனுக்கே தெரியவில்லை மனிதனின் அருமையை.
மறக்க முடியாத நினைவுகள்...2004 - ஆம் ஆண்டு சுனாமியின் பொழுது எனக்கு வயது 12..புத்தாண்டை வரவேற்கும் தருணத்தில் ஒர் அழிவை சந்தித்த நாள்..பள்ளி, விடு என்று எங்கு சென்றாலும் இந்த பேச்சே காதில் வந்தது.இப்பொழுதெல்லாம் கிறிஸ்துமஸ் தினம் வந்தாலே சுனாமியின் கோரம்தான் மனதில் வந்து நிற்கிறது.
நல்ல பதிவு.வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
பாரபட்சமற்ற பதிவு.
வணக்கம் ஐயா,
ஈழ மக்கள் வாழ்விலும், தென்னாசிய மக்கள் வாழ்விலும் மறக்க முடியாத மற்றுமோர் நிகழ்வினை மீட்டியிருக்கிறீங்க.
தப்பேதும் செய்யாத மக்களுக்கு கடல் அன்னை கொடுத்த சாபம். மறக்க முடியுமா இந்த நாட்களையும், நினைவுகளையும்?
அதிலும் சுனாமிக்கு வந்த பொருட்களை வடக்கு கிழக்கு மக்களிற்கு அனுப்பாது சுருட்டியோரை இப்போது நினைத்தாலும் கோபம் வருகிறது.
மறக்க முடியாத நிகழ்வு பாஸ் அது...
உங்கள் பதிவு மீண்டும் அவற்றை எல்லாம் கண் முன் கொண்டுவந்து விட்டது :(
சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் முழுமையான உதவிகள் சேரவில்லை....
கொடுமையிலும் கொடுமை...
இன்று என் பதிவு;;; கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 2
சுனாமியால் ஏற்பட்ட அவலநிலையை கட்டாயம் மக்கள் மறந்துதான் போனார்கள்..அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறந்து போகவில்லை..அரசை எதிர்பார்த்தே அவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்..பாதிக்க பட்ட மக்களை அரசு மறந்துவிட்டது என்பது உண்மைதான்..
அன்போடு அழைக்கிறேன்..
நாட்கள் போதவில்லை
என்னைப் பொறுத்தமட்டில் மறக்கமுடியாத நாள் இந்த நாள்.நினைத்தாலே நெஞ்சம் பதறும் நினைவுகள் அடக்கிய சுனாமி !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பிறக்கிற ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அம்பலத்தார் உங்களுக்கும் உங்கட செல்லம்மாவுக்கும் !
Post a Comment