நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

அல்கைத்தாவுடன் கைகோர்க்க தயாராகும் அமெரிக்கா.



தனது நலன்களுக்காக அமெரிக்கா எதையும் செய்யும் என்பதற்கு இப்பொழுது சிரியாவில் இடம்பெறும் நிகழ்வுகளும் மற்றும் ஒரு உதாரணம். சிரிய அரசுக்கு எதிராக அண்மையில் இடம்பெற்றுவரும் கிளர்ச்சிக்கு அல்கைத்தா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவும் சிரிய கிளர்ச்சிக்காரர்களை ஆதரிக்கிறது.

இந்து, புத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதம் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?



இந்த அம்பலத்தாரின் லொள்ளைப் பாருங்கோ! கொஞ்சக்காலமாக விவஸ்த்தை இல்லாமல் அந்தமாதிரிக் கசமுசா கதைகளாக எழுதிக்கொண்டு என ஒருசிலர் கிசுகிசுப்பது எனது காதிலையும் விழுந்தது. இன்று கொஞ்சம் வித்தியாசமான ஒரு விடயத்தைப்பற்றிச் சொல்லவாறன்.

Saturday

ஆகா கிடைச்சிடிச்சு.





களுகங்கையில் குளிக்கிற சுதுநோனா நயினாதீவு நாகவிகாரை செல்ல சுதந்திரம்

காலி பஸ்நிலையத்தில் பிச்சை எடுக்கும் புஞ்சிமண்டா யாழ்ப்பாண பஸ்நிலையத்திலும் பிச்சை எடுக்க சுந்திரம்.

கொழும்பு காமினி தெமிழ படு காண்ட யாப்பண யண்ட (காமினிக்கு தமிழ்
சரக்கடிக்க யாழ். செல்ல) சுதந்திரம்

மட்டக்களப்பு மரிக்கார் மருதனாமடச் சந்தியிலை கடை வைக்க சுதந்திரம்

Sunday

ஆக்கும்போதே கிக்கு ஏத்தும் தேங்காய்சாதம்



 


அம்பலத்தார் அதை எழுதி இதை எழுதி கடைசியலை எழுத விசயம் இல்லாம அட்டில்கூடத்திலை(அதுதான் சமையல்கட்டை சொல்லுறன்) வந்து நிக்கிறான் என்று முணுமுணுக்கிறது கேட்குது.

உங்களுக்கு எல்லாம் பதில் சொல்லமுன்னம் நாங்க இப்ப செய்யப்போற தேங்காய்சாதத்துக்கு வீட்டிலை தேங்காய் இல்லாதவங்க சட்டென்று ஓடிப்போய் தென்னையிலை ஏறுங்கோ. தென்னையிலை தேள் இருக்கிறதென்று ஊரிலை கதைக்கிறவை. காய் பிடுங்கிற அவசரத்திலை கண்டபடி கையை வைச்சு தேள்கொட்டினால் அதுக்கு நான் பொறுப்பில்லை. வீட்டிலை முழுத்தேங்காய் இருக்கிறவங்க தேங்காய உரிக்கிற வழியைப்பாருங்கோ. உரிச்ச தேங்காய் இருக்கிறவங்க பட்டென்று உடைச்சு பக்குவமா துருவுங்கோ நான் மாற்றரை சொல்லுறன்.

Thursday

அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவன் 18+ கலாட்டாக்கதை

ஜெகாவிற்கு கொழும்பு வந்ததில் செம சந்தோசம். இருக்காதா என்ன வாழ்நாள் கனவாச்சே. நாட்டிலை இடம்பெற்ற போரினால் வன்னிக்கு அப்பால் வேறு எந்த ஊருக்கும் இதுவரை அவனால் போகமுடியவில்லை. இப்ப சண்டை முடிஞ்சதுக்கு அப்புறம் Friends  எல்லோரும் பல இடங்கள் சுத்தி வாறதை பார்க்க ஜெகாவுக்கும் ஆசை அதிகமாகி அப்பாவிடம் கேட்க பயத்திலை, அம்மாவை நச்சரித்துக்கொண்டே இருந்தான். அம்மாவும் இந்த சாட்டுடனாவது ஒருதடவை கொழும்பு பார்க்கலாம் என்ற நப்பாசையிலை அப்பாவுக்கு கொடுத்த அலுப்பிலை, அப்பாவும் பெரிய மனதுபண்ணி, ஜெகா 10 ம் வகுப்பு பாஸ்பண்ணினால் கொழும்பு கூட்டிப்போவதாக ஒத்துக்கொண்டார்.