நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

ரெபேக்கா வீட்டுக்கு போகிறேன்


அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக அவர் அப்படியேதான் இருந்தார்.

Monday

காலம் செய்த கோலம்.



அமைதியாப் போய்க்கொண்டிருந்த காலத்திலை ஒரு புயல். ஜே.வி.பி. இன் அரசுக்கெதிரான புரட்சி. இதன் அரங்கேற்றகாலத்தில் கலகெதற எனும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் கிராமத்தில் மாட்டிக்கொண்டன்.

Saturday

மனிதனே.....மனிதனாய் வாழ்ந்திடு......!



உடுக்கை நழுவின்
கை பார்த்திருப்பதில்லை
ஒரு கண் அழ
மறு கண் சிரிப்பதில்லை
இனம் தேடி மலர்
மணம் பரப்பவில்லை

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 4

ஐயோ! இதென்ன கடவுளே நிலமெல்லாம் ஒரே ரத்தம், கட்டிலெல்லாம் தோஞ்சுபோய்கிடக்கு.

எவன் எவளைக் கொண்டானோ, நான் பாவி வசமா வந்து மாட்டுப்பட்டிட்டனே, கடைசியிலை ஒன்றையும் அனுபவிக்காமலுக்கு இப்பிடி அற்ப ஆயுசிலை ஜெயிலுக்கை போய்க் கிடக்கவேணுமே என்று பதறத்தொடங்கினன்.

Thursday

இலக்கை நோக்கிய பயணம்


எங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கிய

அந்தக் கொடிய வைகாசி 17......

பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும்,

எமது கனவு,

எமது இலட்சியம்

எமது ஏக்கம்,

எமது கொள்கை,

எமது அமைப்பு,